ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு
தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை அடுத்து 3 தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து, அம்மாநில அரசுப் பணித் தேர்வாணையம் (JPSC) நடத்திய 3 முக்கியப் போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ராஞ்சியில் கடந்த சில நாட்களாகத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவர்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஜார்க்கண்ட் அரசு, சர்ச்சைக்குரிய 3 அரசுப் பணித் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் vs ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! அரசியலில் வெடிக்கும் ‘இரட்டை நிலைப்பாடு’ சர்ச்சை! ராகுலுக்கு சிக்கல்!
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோதிலும், இந்த முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், முழு விவகாரத்தையும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ராஞ்சியில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அரசு அலுவலங்கள் மற்றும் தேர்வாணைய வளாகங்களைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசுப் பணித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!