×
 

செய்யாத பணிக்கு 15,80,000-யை ஆட்டையைப் போட்ட அதிகாரி... சிக்கலில் சிக்கிய தவெக அமைச்சர்... ஒப்பந்ததாரர் பகீர் குற்றச்சாட்டு...!

செய்யாத பணிக்கு ரூ15,80,000 க்கு காசோலை வழங்கிய மாநகராட்சி ஆனையாளர் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெக அமைச்சரையும்  நெருக்கமானவராக காட்டுவதாக புகார்

காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மோசடிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய  ஒப்பந்ததாரரால் பரபரப்பு

சிவகங்கை காரைக்குடி மாநகராட்சியில் கடந்த 2025 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  21 ம் தேதி துணை மேயர் அறை மற்றும் மாமன்ற கூட்ட அறையில் மேயர் இருக்கை, துணை மேயர் இருக்கை, ஆணையாளர் இருக்கை வசதி மற்றும் மாமரத்து பணி செய்ய வேண்டி ரூ.18,00,000 மதிப்பீட்டில் ஒப்பந்த நடவடிக்கை அறிவிக்கை வெளியிடப்பட்டது. இணையவழியில் விண்ணப்பித்த படி பிரித்திவி அன்கோ உரிமையாளர் பாண்டி என்பவர் குறைவான ஒப்பந்த புள்ளி அளித்ததால் அவருக்கு ஒப்பந்த பணி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 6.2.2025 அன்று மாமன்ற கூட்ட தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு மேயர், துணைமேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர்.

ஆனால் அதன்பிறகு எந்த பணி என்பது குறித்து மேற்கண்ட ஒப்பந்ததாருக்கு உத்தரவும் வழங்கப்படவில்லை.  பலமுறை காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளரை தொடர்பு கொண்டும் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29&ம் தேதி மாநகராட்சி ஆணையர் சங்கரன், பாண்டியை அழைத்து  மேற்படி வேலைகளை ஆணையர் மற்றும் பொறியாளர் துணை மேயர் உதவி பொறியாளர்கள் தாங்களாகவே வேறு ஒரு நபரை விட்டு அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாகவும், மேற்படி அனைத்து வேலைகளையும் நிர்வாகத்திற்க்கு வேண்டிய நபரான செந்தில்குமார் என்பவர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான செலவு ரூ.15,80,000 என்றும், அனைத்து பணிகளை மேற்கொண்டதாகவும் செய்யாத பணிக்கு நீங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டு  காசோலையை பெற்று கொண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தங்களிடம் கொடுத்தால் நீங்கள் பார்க்கும் ஒப்பந்த பணிக்கு காசோலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மிரட்டியுள்ளனர்.  இதனால் கடந்த மாதம் 29ஆம் தேதி காசோலை மட்டும் பெற்றுக் கொண்டார்.

வேலையே செய்யாமல் செய்ததாக கணக்கு காட்டி, பணத்தை அவர்கள் கணக்கிற்கு வரவு வைக்க சொல்லி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒப்பந்ததாரர்  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயர் துணை மேயர்  மீது முறைகேடு புகார்கள் ஆதாரத்துடன் அம்பலத்தை படுத்தியுள்ளதால் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னை புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சர் பிரபுவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது போல் காட்டிக்கொண்டு, ஒப்பந்ததார்களையும் பொதுமக்களையும் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் பிரபு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share