×
 

எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!

வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மே 16 மற்றும் 17 தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெற்றது. 

இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழிலதிபரான ரதீஷ் என்பவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிங்க: எனக்காக நிதி வழங்கிய பிரதமர் மோடி.. ஸ்டாலினிடம் மோடி சொன்ன சீக்ரெட்.. விளக்கிய ஸ்டாலின்!

அப்போது அமலாக்கத்துறைக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு அமலாக்க துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என நீதிபதி கேட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால்தான் சீல் வைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையில் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share