அரசு கல்லூரி மாணவர்கள் போராட தடை... சி.எம்.விஜயை கை காட்டிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்...!
ஆட்சியருக்கே தெரியாமல் அதை செய்துள்ளார். தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் போராடுவதற்கு தடை விதித்த, இடதுசாரி இயக்கத்தினரை கணக்கெடுப்பது உள்ளிட்ட சுற்றைக்கைகள் குறித்த கேள்விகக்கு, குஜிலியம்பாறை தாசில்தா சொந்த வெறுப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் 6 மாதத்தில் ஓய்வு பெறவுள்ளார். ஆட்சியருக்கே தெரியாமல் அதை செய்துள்ளார். தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு இப்படி எந்த எண்ணமும் கிடையாது. ஒருசிலர் தான் இதை தவறாக அணுகியுள்ளனர். அரசு கல்லூரி மாணவர்கள் போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் அரசுக்கு உடன்பாடு இல்லை.
கல்லூரிகள் அனைத்தும் கவர்னரின் மேற்பார்வையில் நடக்கிறது. கல்லூரிகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கவர்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் பல சிக்கல்கள் உள்ளன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தான் எங்கள் பலம்.! ஒவ்வொரு வாக்கும் அவருக்காகவே..! நிர்மல் குமார் பெருமிதம்.!!
ஜனவரி மாதம் வரும்போது எந்த பல்கலையிலும் துணை வேந்தர்கள் இருக்க மாட்டார்கள். நிர்வாக ரீதியாகவும் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவற்றை சீரமைக்க முயற்சித்து வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடக்கவில்லை, சான்றிதழ்கள் கொடுக்க முடியவில்லை. கல்லூரிகளை மாநில அதிகாரத்துக்கு கொண்டு வந்தால் தான் நம்முடைய முழு கட்டுப்பாட்டில் செயல்படுத்த முடியும் என்றார்.
நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசு நிர்வாகம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகிய இரண்டு சர்ச்சைக்குரிய உத்தரவுகள் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட இடதுசாரி அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும்வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்களின் போராட்ட நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே, ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் அரசின் மெகா மின்சார திட்டம்… மின் இணைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை..! அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு..!!