×
 

மே.வங்கத்தை ஜெயிச்சதும் டெல்லி தான் டார்கெட்!! வேகம் காட்டும் மம்தா! பாஜக மீது தாக்கு!

மத்தியில் பாஜகவை அகற்றி டெல்லியைக் கைப்பற்றுவதே இலக்கு என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்காளத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராணிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதே தனது இறுதி இலக்கு என்று அறிவித்தார்.

மம்தா பானர்ஜி பேசுகையில், “பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் புல்டோசர்களைப் பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றிவிடும். மாநில அந்தஸ்தை ரத்து செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். நமது மாநிலத்தை அழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் 4-வது முறையாக ஆட்சியமைக்கும். அதன் பிறகு, பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்தியில் பாஜகவை அகற்றி டெல்லியைக் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு” என்று உறுதியாகக் கூறினார்.

இதையும் படிங்க: தலைமை தேர்தல் கமிஷனர் பதவியை பறிக்க திட்டம்?! பார்லியில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு?!

மேலும், “வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாதபோது, அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மம்தாவின் இந்தப் பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மம்தா அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு, மேற்கு வங்கத் தேர்தலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை கடைப்பிடித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share