×
 

தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் இவரா?... விடிந்ததுமே வெளியான பரபரப்பு தகவல்... டெல்லி தலைமை எடுத்த அதிரடி முடிவு....!

தமிழக வெற்றிக் கழகத்துடன் அவருக்கு உள்ள நெருக்கமும், தலைவர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், வரும் வாரத்திற்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதில் பெரும்பாலும் மாணிக்கம் தாக்கூருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தலுக்கு முன்பாகவே தாம் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைகளின்போது தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தலைவர் பதவியிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த வாரம் பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மீண்டும் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: #BREAKING சென்னையை அதிர விட்ட துப்பாக்கி சத்தம்... கொலை வழக்கில் ரவுடி சுட்டுபிடிப்பு...! 

ஏற்கனவே ராஜினாமா கடிதத்தையும் அளித்துவிட்டதாகவும், இனி தலைவர் பதவியில் தொடர விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான போட்டியில் மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூருக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ஜோதிமணியும் தனக்கு ஆதரவான மூத்த தலைவர்களின் ஆதரவை பெற்று தலைவர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாணிக்கம் தாக்கூரைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது, அமைச்சரவையில் இடம்பெறுவது உள்ளிட்ட முக்கிய அரசியல் முடிவுகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக அவர் செயல்பட்டு வருகிறார். தற்போது ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளராகவும் இருந்து வருவதால், அவருக்கு இந்த பொறுப்பை வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் மாணிக்கம் தாக்கூரின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் அவருக்கு உள்ள நெருக்கமும், தலைவர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எப்படியிருந்தாலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதில் மாணிக்கம் தாக்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும், மாணிக்கம் தாக்கூர் ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவராகவும், ஜோதிமணி பிரியங்கா காந்திக்கு நெருக்கமான தலைவராகவும் பார்க்கப்படுகின்றனர்.

இருவருமே தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூருக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சாதிவெறி கூட்டத்திற்கு தீனி போடாதீங்க... எதிர்பாராத இடத்தில் இருந்து செங்கோட்டையனுக்கு வந்த வார்னிங்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share