×
 

தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு வேல்முருகன் தெரிவித்தார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார். இந்த ஆண்டு சுமார் 37,877 மாணவர்கள் பட்டங்கள் பெற உள்ளனர். இதில் 12,932 ஆண் மாணவர்களும் 24,945 பெண் மாணவர்களும் அடங்குவர். 

பல்கலைக்கழகத்தின் அபிஷேகபட்டி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் 871 மாணவர்கள் (175 ஆண்கள், 696 பெண்கள்) நேரில் பங்கேற்று ஆளுநர் அர்லேகர் கையால் பட்டங்களைப் பெறுகின்றனர். மீதமுள்ள 37,006 மாணவர்கள் அவதியாக பட்டங்கள் பெறுகின்றனர். இதில் 758 பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 113 பதக்கப் பெற்ற மாணவர்கள் ஆளுநர் கையால் பட்டம் பெறுகின்றனர். 

உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் விழாவில் பாராட்டுரை வழங்க இருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிசை தொடர்பான சர்ச்சை காரணமாக விழாவைப் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்பவன் நெறிமுறையின்படி வந்தே மாதரம் முதலில் இடம்பெறவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதையும் படிங்க: மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்ததை அடுத்து அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் ஆன பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டு பாடப்பட்ட நிகழ்வு பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் சம்பவத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டித்துள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வேல்முருகன், முதல்வர் விஜய் இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: டாஸ்மாக்..! இரட்டை நிலைப்பாடு ஏன்.? சொல்லுங்க CM..! வேல்முருகன் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share