×
 

“ப்ளீஸ்... மோடி உடனே தலையிடுங்க” - 1.65 லட்சம் மக்கள் கொத்து, கொத்தாக மரணம்... வைகோ உருக்கமான கோரிக்கை...!

பாலஸ்தீனம், காசாவில் 1.65 லட்சம் பேர் இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள். மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உணவு கூட இல்லாமல் இனப்படுகொலை நடத்தப்படுகிறது, இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.

கோவை சூலூரில் நடைபெறும் மதிமுக கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : பேரறிஞர் அண்ணா 117 -வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில்  செப்.15 ல், மிக பிரமண்டமாக நடத்த உள்ளோம். 1995 -ல் நடந்தது போல சரித்திர மாநாட்டை மீண்டும் நினைவூட்டுவதை போல இந்த மாநாடு அமையும். 

கடந்த ஆண்டு மதிமுக தோழர்கள் நடத்திய போராட்டத்தின் காரணத்தால்  கோவை - நாகர்கோவில், பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் விரைவு ரயில்கள்  சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்கிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து வரும் காரணத்தால் மீண்டும் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம். 

பாலஸ்தீனம், காசாவில் 1.65 லட்சம் பேர் இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள். மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உணவு கூட இல்லாமல் இனப்படுகொலை நடத்தப்படுகிறது, இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.

இதையும் படிங்க: எனக்கு சந்தோஷம் பா... சிபி ராதாகிருஷ்ணனுக்கு வைகோ வெளிப்படை ஆதரவு!

நேரு காலத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து  டெல்லியில் அவர்களுக்கு தூதரகம் அமைத்து கொடுத்த இந்திய அரசு,  இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனக் கூறி,ஐ.நாவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். 

பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடி ஒரு ஜனநாயக படுகொலை, தேர்தல் ஆணையம் அது உண்மை இல்லை என சமாதானம் கூறுகிறது. ஆனால் இந்தியா கூட்டணியினரிடம் ஆவணங்களும், ஆதாரம் உள்ளது. இது ஜனநாயகத்தை கருவருக்கும் வேலை, இப்படிபட்ட மோசடி இந்தியாவில் நடந்த்து இல்லை. இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியினர் போராடி வருகின்றனர். 

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக, முதல்வர் மூலம் கூறும் அறிவிப்பின் படி மதிமுக நடந்மு கொள்ளும். திமுக எடுக்கும் முடிவை ஏற்றுகொள்வோம். தூய்மை பணியாளர்கள் அதே பணியை செய்யக்கூடாது என்பது எனது கருத்து. குல கல்வி போல இது சமூக நீதிக்கு எதிரானது என கூறினார்.

இதையும் படிங்க: கொலை செய்ய நெனைச்சாலே குலை நடுங்கணும்... சிறப்பு சட்டம் கொண்டுவர வைகோ வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share