×
 

ஆரம்பமே இப்படியா?... சட்டமன்றத்தில் பதவியேற்காத கீர்த்தனா... எம்.எல்.ஏ. சான்றிதழை மறந்து விட்டு வந்ததால் பரபரப்பு...

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரும், சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கீர்த்தனா, தான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற சான்றிதழைக் கொண்டு வராததால் இன்று பதவியேற்கவில்லை. 

2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று சென்னையில் புதிய அரசுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக கீர்த்தனா பதவியேற்றுக் கொண்டார். 

29 வயதான கீர்த்தனா பட்டதாரி பெண். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட கீர்த்தனா, அந்த தொகுதியில் இரண்டு முறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் என இரு பெரும் தலைவர்களையும் ஓரங்கட்டி, 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா. இவர் அமைச்சரவையிலும் சட்டப்பேரவையிலும் மிக இளம் வயது உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில், கோட் சூட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா முன்னிலையில், அவர் தனது உறுதிமொழிப் படிவத்தை வாசித்துச் சட்டமன்ற உறுப்பினராகவும், சபையின் முன்னவராகவும் தனது பணிகளைத் தொடங்கினார். தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் சட்டமன்றத்திற்குள் வந்து உறுப்பினராகப் பதவியேற்ற இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. முதலமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்களும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் வரிசையாகப் பதவியேற்றனர். 

இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையாக..! விஜய் பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!

நேற்று முதலமைச்சர் விஜயுடன் அமைச்சராக பதவியேற்ற கீர்த்தனா, இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க வந்திருந்தார். ஆனால் சிவகாசி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை மறந்து விட்டு வந்ததால், பதவியேற்க முடியாமல் போனது. தவெக பெண் எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்து வைத்த முதல் நாளே வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு பதவியேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம், தவெக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதையும் படிங்க: கட்சியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர்கள் தீவிரம்!! அல்லாடும் அதிமுக!! காலியாகும் எடப்பாடி கூடாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share