×
 

“அந்த வகையில் பார்க்க முடியாது...” - சி.எம்.விஜயை சீண்டிய சீமானுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி...!

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முதல்வர் திரும்பப் பெற்றது எனக்கு எதிர்பாராத, மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் இரவு, பகல் பாராமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைவரும் பாராட்டும் வகையில், உலகமே கவனிக்கும் அளவுக்கு சிறப்பான நிதிநிலை அறிக்கை தயாராகி வருகிறது. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது துறை, தொகுதி மற்றும் மக்களின் நலன் சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதன் பலனை விரைவில் சட்டப்பேரவையில் காண முடியும் என்றார். 

நீட் தேர்வு போராட்ட வழக்குகள் குறித்த கேள்விக்கு, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முதல்வர் திரும்பப் பெற்றது எனக்கு எதிர்பாராத, மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. போராட்டங்களின் போது சில இடங்களில் விரும்பத்தகாத கோஷங்களும், பதாகைகளும் இருந்தன. சிலர் முதலமைச்சரை விமர்சித்தும் பேசினர். இருப்பினும், அண்ணா வழியில் செயல்பட்டு, நீட்டுக்கு எதிராக போராடிய அனைவரின் மீதான வழக்குகளையும் முதல்வர் ரத்து செய்துள்ளார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

இதற்காக மாணவர்கள் சார்பில் முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், அவர்களுடன் அரசு நிற்பதாகவும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

தொழில் முதலீடுகள் குறித்த கேள்விக்கு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகும் சில தகவல்கள், தற்போதைய நிலவரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை. முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய ஆட்சியின் முதல் மூன்று மாதங்களிலேயே அதிக அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அமைச்சர் கீர்த்தனாவின் தலைமையில், குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. ஒரு இளம் பெண் அமைச்சரின் சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சீமான் கருத்து குறித்த கேள்விக்கு, சீமான் கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, "அவரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரும் திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே. எனவே, நடிகர் மற்றும் தலைவர் என்ற வேறுபாட்டை அந்த வகையில் பார்க்க முடியாது" என்றார். 

திருப்பதி வழிபாடு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், வேளாண்மை பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்று வழிபட்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், இது அமைச்சரின் தனிப்பட்ட இறைநம்பிக்கை சார்ந்த விஷயம் என்றார். இதற்கு முன்பும் இதுபோன்ற நடைமுறைகள் இருந்துள்ளன. எனவே, ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை விமர்சிப்பது சரியானது அல்ல என்றும் தெரிவித்தார்.

கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்த கேள்விக்கு,  அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். கல்வித்துறையை ணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் என மூன்று கோணங்களில் அணுக வேண்டும். மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளுடன் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் வழங்க வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கான சீருடைகளையும் காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு ஏற்ற வகையில் வசதியான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக பல மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, அவற்றின் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். வகுப்பறைகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றார். 

இதையும் படிங்க: எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share