பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!
ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு அறநிலையத் துறையை ஒப்படைத்திருப்பது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பின.
தமிழக வெற்றி கழகத்தோட தலைவரும், முதலமைச்சருமான சி ஜோசப் விஜய் அறநிலையத்துறை அமைச்சர் பதவியை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிராமணரான ரமேஷுக்கு கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரே அதற்கு அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக ஆன்மீக அரசியல் களத்தில் பெரும் விவாத புயலை கிளப்பி இருக்கிறது தமிழக வெற்றி கழக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம். தமிழகத்தின் மிக முக்கிய பாரம்பரிய பின்னணி கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றிருக்கிற ஸ்ரீரங்கம் தொகுதியோட எம்எல்ஏவான ரமேஷ் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான் தற்போது கோட்டை வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில குறிப்பாக பிராமண அமைப்புகள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புகள் தரப்பில கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருது. இதற்காக பல சட்ட போராட்டங்களும், சமூக ஊடக பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருது. இப்படிப்பட்ட ஒரு தார்மீக மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் நிலவி வரும் சூழல்ல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எடுத்திருக்கிற [இசை] இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கு.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!
ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு அறநிலையத் துறையை ஒப்படைத்திருப்பது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பின. நேற்று சென்னையில் நடைபெற்ற புதிய அமைச்சர்களின் அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், புதிய அறநிலையத்துறை அமைச்சரின் சாதி மற்றும் சமூகப் பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் கடுமையான விமர்சனங்கள் குறித்துக் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கும் உன்னத நோக்கத்தோடுதான் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்தப் புதிய அமைச்சரவையை அசுர பலத்துடன் கட்டமைத்துள்ளார். ஆனால், இந்த அமைச்சரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ் அவர்களின் சாதியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, திட்டமிட்டுத் தவறான, அவதூறான பிரசாரங்களை மக்கள் மத்தியில் அசுர வேகத்தில் பரப்பி வருகின்றன" என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், பிராமணர் என்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக எழும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் இங்கு பதவி வழங்கப்படவில்லை” என்றும் பதிலளித்தார்.
இதையும் படிங்க: புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!