திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!
திருவாரூரில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பரப்புரையை திருவாரூரில் இருந்து முறைப்படி தொடங்குகிறார். இது திமுகவுக்கு மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர், ஸ்டாலினின் பரப்புரைக்கு தொடக்கப் புள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பெரும் அடையாள முக்கியத்துவம் கொண்டது. திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு அருகில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் சொந்த வேட்பாளர்களுடன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவு திரட்டுவார்.
முதல் நாளான இன்று திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, கீழ்வேளூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பரப்புரை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியாகக் கருதப்படுவதால், இங்கிருந்து பரப்புரையைத் தொடங்குவது கட்சியின் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. திருவாரூர் பரப்புரைக்கு செல்வதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: வாங்க தளபதி... வென்று வா ஸ்டாலினே..!! முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த கொளத்தூர் மக்கள்..!!
திருவாரூர் தேர்தல் பரப்புரை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன் என்று கூறினார். மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, திராவிட மாடல்-2.0-வுக்கு ஆதரவு கேட்டு ஒருவராகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!