×
 

கடவுள் பெயரை மிஸ்யூஸ் செய்யுறாங்க.. முருகர் பக்தர்கள் மாநாட்டை வச்சு செய்த முதல்வர்!

அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை பாஜக மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் 517 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  இன்று  நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார். 


அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு ஒழுங்காக தருவதில்லை தந்தாலும் அரைகுறை தான். இந்த நிலையில் மத்தியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து சாதியாலும் மதத்தாலும் தொடர்ந்து பிளவு படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். 

அவர்களால்,  முடியாத போது இங்கிருக்கும் அதிமுகவினரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். நாட்டில் இருக்கும்  மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால் பிஜேபியும் அதிமுகவும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல். தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அதிமுகவினர் வைத்துக்கொண்டு பாஜகினர் பேசுகிறார்கள். உண்மையில் சொன்னால் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணிக்கு தான் இப்பொழுது ஆபத்து.

இதையும் படிங்க: நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

மிஸ்டு கால் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் கட்சி வளர்க்க முடியாமல் போனது. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள். இவர்களுடைய போலி பக்தி அரசியல் யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் மீட்டெடுத்த மண். தமிழ்நாடு அனைத்து மதத்தினருக்கும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினருக்கு நல்லொழுக்கத்தோடும் வாழ்கின்ற மண்.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம் அதேபோல் 84 கோடி மதிப்பில் தேவாலங்களையும் மசூதிகளையும் புரணமித்துள்ளோம் இதுதான் திராவிட மாடல் இதையெல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பத்தி எரிகிறது அவர்களால் தமிழ்நாட்டு தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சிகளை பற்றி பேச முடியவில்லை, ஓட்டு கேட்க முடியவில்லை. முடியாது. செய்திருந்தால் தான் சொல்ல முடியும் மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால் அங்கேயும் திமுக ஸ்கோர் பண்ணிட்டாங்க என்று கவலையில் இருக்கிறார்கள். 

ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த  படாத பாடு படுகிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது மீண்டும் சொல்கிறேன் இந்த மண் பெரியார் பண்படுத்திக் கொண்டிருக்கின்ற மண் நேர அறிஞர் அண்ணாவால் மேம்படுத்தக்கூடிய மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள கூட்டம் அண்ணா பேரையே அண்ணா அடமானம் வைத்தார்கள் இன்னிக்கு கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது. 

தமிழ்நாடு  தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு  சதி வேலைகளை நோக்கத்தை புரிந்து தமிழினத்திற்கும் எதிரானவளுக்கும் துரோகிகளுக்கும் ஒரு சிறப்பான பாடத்தை புகட்ட வேண்டும் உங்களுக்கு அரணாக என்றைக்கும் திமுக இருக்கும் அதேபோல் நீங்களும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

இதையும் படிங்க: பெரியாரையே இழிவுபடுத்திய திமுக எங்களுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை... அதிமுக கடும் சாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share