”தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி...” - மே தினத்தில் சிவப்பு நிற உடையணிந்து உற்சாகமூட்டிய ஸ்டாலின்...!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியையும் ஏற்றார்.
மே தினத்தையொட்டி உழைப்பாளர் சின்னத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியையும் ஏற்றார்.
அப்போது உரையாற்றிய அவர், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மேல் மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் இந்தியாவிலேயே இந்த மே முதல் நாளை சென்னையில் தான் நாம் கொண்டாட தொடங்கியிருக்கிறோம். சிந்தனை சிற்பி சிங்காரவேல் தலைமையில் தான் முதன் முதலில் சென்னை மாநகரத்திலே இந்த மே முதல்நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிலாளருடைய உரிமை அதேபோல் இன்றைக்கு நம்முடைய கழக தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற நான்காம் தேதி அதில் எந்த மாற்றமும் இல்லை. துளி அளவு கூட மாற்றமில்லை என்பதை ஏதோ கருத்து கணிப்பு அடிப்படையில் நான் சொல்லுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. கழகத்துடைய உணர்வை உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் அந்த கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர வேறல்ல ஆக அதே நேரத்தில் இன்று மே முதல் நாளை இன்றைக்கு தொழிலாளருக்குரிய அந்த மரியாதையை மதிப்பை அவருடைய உரிமையை இன்றைக்கு கொண்டாடக்கூடிய வகையில இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: "CM சார் நீங்க தான் கெத்து TVK எல்லாம் வெத்து"... மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பிய சிறுமி... வைரல் வீடியோ...!
மே முதல் நாள் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் விடுமுறையாக அதை அறிவித்து கொண்டாட தொடங்கினார். ஊதியத்தோடு கூடிய விடுமுறையாக மட்டுமல்ல அந்த விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தவர் அண்ணா அவருக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மே முதல்நாள் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது, அரசு விடுமையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடுமுறை நாளை இந்தியா முழுமைக்கு கொண்டு வர வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொல்லி நாடாளுமன்றத்திலே நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் குரல் எழுப்பி பிரதமராக இருந்த வி.பி.சிங் சிங் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அரசு விடுமுறையாக ஊதியத்தோடு கூடிய விடுமுறையாக அறிவித்து.
அதுவும் இன்றைக்கு கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ரெண்டு மூணு நாட்களில் நம்முடைய தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடுதான் அந்த கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆக அது தொடரும் தொடரும் தொடரும் என்ற உறுதியை எடுத்துச் சொல்லி இந்த மே தின நினைவு பூங்காவை தலைவர் கலைஞர் அவர்கள் தான் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய நினைவு சின்னத்தையும் கருணாநிதி தான் உருவாக்கி தந்தது மட்டுமல்லை எப்படி அமைய வேண்டும் என்று பலமுறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து அதையெல்லாம் சரி செய்து உருவாக்கி தந்திருக்கிறார்கள். எதற்காக குறிப்பிட்டு சொல்கிறேன் என்று சொன்னால் தொழிலாளர்கள் மீது தொழிலாளர் உரிமை மீது எந்த அளவுக்கு கருணாநிதி நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் மட்டுமல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் பணியாற்றுவோம் உழைப்போம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: சைக்கிளில் ஜாலியாக வலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... 3வது நாளாக கொடைக்கானலில் நடைபயிற்சி..!