×
 

தந்தை பெரியார் நினைவை போற்றுவோம்... முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...!

தந்தை பெரியார் நினைவு நாளை ஒட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1973-ஆம் ஆண்டு இதே நாளில், 94 வயதில் காலமான பெரியார், சமூக சீர்திருத்தத்தின் மாபெரும் சின்னமாகவும், பகுத்தறிவுவாதியாகவும், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவிப்பாளராகவும் திகழ்ந்தவர். 1924 இல் கேரளாவின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். இதனால் "வைக்கம் வீரர்" என்ற பட்டம் பெற்றார்.

1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இது சாதி ஒழிப்பு, பெண் உரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தியது. சுயமரியாதைத் திருமணங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தினார்.1939 இல் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944 இல் அதை திராவிடர் கழகமாக மாற்றினார். திராவிட இனம், ஆரிய ஆதிக்க எதிர்ப்பு, தனி திராவிட நாடு கோரிக்கை ஆகியவை அவரது அரசியலின் முக்கிய அம்சங்கள். இந்தி திணிப்புக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தினார். 

 தமிழ்நாட்டில் பெரியாரின் நினைவு தினம் என்றாலே அது அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும், பெரியார் திடலில் உள்ள அவரது உருவப்படத்துக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துவது வழக்கம். கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் திமுக தலைவர்கள் உள்ளிட்டோர் பெரியாரின் கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். 

இதையும் படிங்க: பொங்கலுக்கு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து குடுங்க... முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்...!

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி தலைமைச் ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: உங்க அரசியல் வாழ்க்கைக்கு நீங்களே முடிவுரை எழுதுறிங்க EPS… எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share