×
 

ஆட்சியில் பங்கு? மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி..! பேரவையில் உரக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது, மாநிலத்தில் சுயாட்சி, மத்திய கூட்டாட்சி என்பதை திமுக ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது என்று கூறினார். அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்று இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மீதும் அடக்குமுறை... ஃபாசிஸ்ட் மனநிலை தான்...! EPS கண்டனம்..!

இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும் என்றும் மாநிலங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம் எனவும் தெரிவித்தார். சுயாட்சிக் கொள்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல என்றும் இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

இதையும் படிங்க: வரும் 22 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு..! திமுக தலைமை அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share