×
 

கட்சியை சீரமைக்கும் நேரம் வந்துவிட்டது! நாதகவில் போர்க்கொடி! சீமானிடம் தம்பிகள் எதிர்பார்ப்பு!

''தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சியை, சீரமைக்கும் நேரம் வந்துவிட்டது,'' என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி (நா.த.க.) தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்களை சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியுள்ளனர்.

கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கூறுகையில், “2016 சட்டசபைத் தேர்தலில் இருந்து இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

நா.த.க.வில் ஒரு தொகுதிக்கு 12 முதல் 18 மாவட்டச் செயலர்கள், 40 மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஒரு மண்டலப் பொறுப்பாளர் என பிற கட்சிகளில் இல்லாத அளவுக்கு பெரிய கட்டமைப்பு உள்ளது. மொத்தம் 9,000க்கும் மேற்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 2,800க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர் பதவிகள் இருந்தும், இவற்றில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகள் இன்னும் நிரப்பப்படவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடையேயும் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: படிச்சவனுக்கு மதிப்பில்லை!! நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு! காரைக்குடி பிரசாரத்தில் சீமான் ஆவேசம்!

மாவட்ட நிர்வாகிகளுக்கு எவ்வித உண்மையான அதிகாரமும் இல்லாததால், கட்சி வலுவாக இருக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில்கூட எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை. இதனால் பல தொகுதிகளில் வேட்பாளரும் மண்டலப் பொறுப்பாளரும் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் தேர்விலும் குளறுபடிகள் நடப்பதாக நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சீமான் எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம் என்றாலும், ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களை அடிக்கடி மாற்றுவது மற்றும் சொந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல், வெகு தொலைவில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவது போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், சமூக ஊடகங்களில் வலுவாக இருந்த நா.த.க., இந்தத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் எதிர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நா.த.க.வை நம்பிய வாக்காளர்களைத் தக்க வைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கட்சித் தலைவர் சீமான், தன்னைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் புதிய முகங்களை வளர்க்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முற்றிலும் கண்டுகொள்ளாததும் பெரும் பிழையாகப் பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் கூறுகையில், “கள நிலவரத்தை சீமான் புரிந்துகொண்டு, அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி, கட்சியின் கட்டமைப்பில் உடனடி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்சியின் வளர்ச்சி தொடர்ந்து பாதிக்கப்படும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share