புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. புதிய இயக்கத்தை கடனாக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார். WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். தற்போது ஒரு லட்சத்தை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
அண்ணாமலை இளைய தலைமுறையினரின் நம்பிக்கையாக விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவிற்கு அண்ணாமலையின் விலகல் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கிய தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மாநில உரிமைக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அண்ணாமலை தவறாக குற்றம் சாட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமை பற்றி பேசுவார் என்று கூறியுள்ள அவர் நாணயம், செப்பேடுகளை கூட மீட்டுக் கொண்டு வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையின் விலகல் பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம் என்றும் ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!