×
 

இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.

கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் தென் முனையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இங்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், கடல் நடுவே ஒரு பாறையின் மீது 133 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை, தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த சிலை, இரவு நேரங்களில் லேசர் விளக்குகள் மற்றும் நவீன மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.

இந்த சிலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக கடலுக்கடியில் சிறப்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கேபிள்கள் கடல் சூழலின் காரணமாக அடிக்கடி பழுதடையும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கேபிள் பழுதடைந்தபோது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும், 2026 ஜூன் மாத தொடக்கத்தில் மீண்டும் கேபிளில் பழுது ஏற்பட்டது. இதன் விளைவாக திருவள்ளுவர் சிலை மூன்று நாட்களாக முழுமையான இருளில் மூழ்கியது. 

தமிழகத்தின் ஞான ஒளியாகத் திகழும் திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஜோசப் விஜய் ஆட்சி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் தலைநகரில் தொடங்கி கிராமங்கள் வரை தினந்தோறும் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது தவெக ஆட்சியில் அன்றாட நிகழ்வாகிவிட்ட வேளையில், கொடூரத்தின் உச்சமாக உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக வெளிவந்துள்ள அவலச் செய்தி தவெக அரசின் திறனற்ற ஆட்சிக்கான சாட்சி என்றார்.

இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!

"தவெக ஆட்சியில் 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும்" என்று அன்று தேர்தல் வாக்குறுதியில் முழங்கிய முதல்வர் விஜய் தற்போது வள்ளுவர் சிலையே இருளில் மூழ்கியதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? என்று கேட்டுள்ளார். மின்வெட்டால் மக்கள் தூக்கமின்றித் தவிப்பதை வேடிக்கை பார்த்தது போல, இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறாரா? திருவள்ளுவரின் ஆடையின் நிறத்திற்கு வரிவரியாய் எழுதி வரிந்து கட்டிய தவெக அமைச்சர் தற்போது திருவள்ளுவர் சிலையை இருளில் ஆழ்த்திய தவெக அரசை கண்டிப்பாரா அல்லது வக்காலத்து வாங்குவாரா? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

மொத்தத்தில், போலி விடியல் ஆட்சியில் இருந்து தப்பிக்க நினைத்த தமிழக மக்களை இருளில் தத்தளிக்க விட்டதோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் ஐயன் வள்ளுவர் சிலையையும் இருளில் ஆழ்த்திய இந்த தவெக அரசு "மாற்றுச் சக்தி" என்ற வார்த்தையைக் கூட இனி என்றும் உச்சரிக்கக் கூடாது என்று கூறினார். 

இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share