தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!
தர்மபுரியில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.
தர்மபுரியில் இளம் பெண் மீது கத்திக்குத்துச் சம்பவம் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார். வெற்று விளம்பரங்களைக் கைவிட்டு சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார்.
தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது நடத்தப்பட்டிருக்கும் கத்திக்குத்துச் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தச் சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் மாவட்டத் தலைநகரத்தின் பேருந்து நிலையத்திலேயே, ஓர் இளம்பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால், சாமானியப் பெண்கள் எங்குதான் நிம்மதியாக நடமாட முடியும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். ‘சிங்கப்பெண் படை’ போன்ற அறிவிப்புகள் அனைத்தும் வெறும் காகித அளவிலும், அரசு விளம்பரப் பலகைகளிலும் மட்டுமே சுருங்கிப் போய்விட்டனவா என்று தமிழகப் பெண்கள் இன்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: ரூ.9,000 கோடி... தவெக அரசு தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... தமிழ்நாட்டிற்கு அடுத்த பேரதிர்ச்சி...!
எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இனியாவது தனது வெற்று விளம்பரப் போக்கைக் கைவிட்டு, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், தருமபுரி சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணுக்குச் சிறந்த மருத்துவ உதவியை உறுதி செய்வதோடு, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் ரோந்துப் படைகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!