×
 

நலம் AI APP..! வீட்டிலிருந்தே முன்பதிவு..! செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

நலம் ஏஐ செயலியை தொடங்கி வைத்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ‘நலம் ஏஐ’ என்ற புதிய ஏஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் (OP) சிகிச்சை முன்பதிவை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வருகை தருகின்றனர். பதிவு மற்றும் முன்பதிவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ‘நலம் ஏஐ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உரையாடல் அடிப்படையில் செயல்படும் ஏஐ சாட்பாட் ஆகும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே எளிய உரையாடல் மூலம் மருத்துவ முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் 96192 22999 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘HI’ என்று அனுப்பினால் போதும். அதன் பிறகு ஏஐ உதவியுடன் தேவையான தகவல்களைப் பெற்று, முன்பதிவு செய்ய முடியும். முதல்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இதயவியல் துறையில் பைலட் அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக பிற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனி OP வாங்க NO TENSION...! வந்தாச்சு நலம் Ai APP..!! அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைப்பு..!!

இந்தப் புதிய சேவை தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. நலம் AI செயலியை தொடங்கி வைத்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் கொடுத்தார். அரசு மருத்துவமனைகளில் அனுமதிச்சீட்டு பெற இந்த செயலியை பயன்படுத்தப்படலாம் என்று கூறினார். Whatsapp மூலமாக அனுமதி சீட்டு பெறும் முறை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share