அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்... கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ... இ.பி.எஸுக்கு தலைவலி..!
நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் உள் கோஷ்டி பூசல் தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரை சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்எல்ஏவாக இருந்த சந்திரசேகரன், அப்போதே நாமக்கல் மாவட்டச் செயலர் தங்கமணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பனிப்போர் நிலவியது. கடந்த 2021 தேர்தலில் மீண்டும் சீட் கேட்டபோது தங்கமணி மறுத்துவிட்டார்.
அவருக்கு பதிலாக சந்திரன் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியடைந்த சந்திரசேகரன் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க: அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!
ஓ.பி.எஸ் அணியில் இணைந்த அவர் அங்கிருந்து விலகி இரு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் தங்கமணி அணி - சந்திரசேகரன் அணி என கட்சி இரு பிரிவுகளாக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.
வரும் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பிய சந்திரசேகரன், தொகுதி மக்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வந்தார். பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சீட் கேட்டபோது, "மாவட்டச் செயலர் தங்கமணியை சந்தியுங்கள், அவர் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டாராம்.
இதற்கிடையே கடந்த தேர்தலில் போட்டியிட்ட சந்திரனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் மிகுந்த விரக்தியடைந்த சந்திரசேகரன், "இனி அ.தி.மு.க.வில் இருப்பது சரியல்ல" என்று முடிவெடுத்துள்ளார்.
அவர் தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பெருமளவு சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைந்தால் தொகுதியில் மூன்று முனைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் உள் கோஷ்டி பூசல் தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!