×
 

“ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்” - மகளிர் குறித்து மட்டமான கமெண்ட்... ரூ.1000 உதவித்தொகையை நக்கலடித்தாரா நாஞ்சில் சம்பத்?

எடப்பாடியை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டும் என திருவாரூரில் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் பொதுக்கூட்டம் திருவாரூர் கீழவீதியில் திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை முடிவு கட்ட வேண்டும் என அரசியல் அனாதைகள் பேசுகிறார்கள். பாஜகவும், அண்ணா திமுகவும் கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணியை அசைக்க முடியுமா..?. எடப்பாடியை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றி அனுப்ப வேண்டும். 2 கோடியே 88 லட்சம் பேர் முதல்வர் ஆட்சியில் நேரடியாக பயன் பெற்றிருக்கின்றனர். நிதி பற்றாக்குறைக்கு மத்தியிலும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பவர் தமிழ்நாடு முதல்வர். ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்பது அந்த கால திரைப்பட பாடல். ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம். பாஜகவுக்கு கட்சிக்கு தலைவன் யார் என்று தெரியவில்லை., பாட்டாளி மக்கள் கட்சிக்கு யார் தலைவர் என்று தெரியவில்லை., இந்தியாவின் பிரதமர் டெல்லியில் இருக்கிறாரா.? நியூயார்க்கில் இருக்கிறாரா.? என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

 யுத்தத்தை நிறுத்தியது பற்றி அவர்தான் அறிவிக்கிறார் அப்படி என்றால் யார் பிரதமர்.? இன்று சைப்ரஸ் நாட்டில் இருக்கும் பிரதமர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை பற்றி கவலைப்படாமல் உல்லாச பயணம் சுற்றிக் கொண்டிருக்கிறார். பிரதமரின் விமான பயண கட்டணம் மட்டும் எவ்வளவு என்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது 238 கோடி ரூபாய்க்கு விமான பயண கட்டணத்தில் பயணித்திருக்கிறார் பிரதமர்‌.

அவருடைய மற்ற செலவுகள், அவருடன் பயணிப்பவர்கள் அது பற்றி எல்லாம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கவில்லை. பிரதமருடைய விமான பயண கட்டணம் மட்டும் 238 கோடி ரூபாய். இனி சுடுகாடு மட்டும் தான் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் 72 வயதில் தன்னையே வருத்தி உழைக்கிறார். வியர்வை பாசனம் செய்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்பவர்களின் எண்ணத்தில் வேர் இல்லை ஆழமில்லை. இந்த இயக்கம் ஏழாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share