×
 

நீதித்துறை ஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

நீதித்துறை தொடர்பாக இடம்பெற்று இருந்த 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாபஸ் பெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சமீபத்தில் வெளியிட்ட 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 'நீதித்துறையின் பங்கு' என்ற அத்தியாயத்தில் 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல்களை மாணவர்களுக்கு கற்பிப்பது திட்டமிட்ட அவமதிப்பு போல தெரிவதாக தலைமை நீதிபதி சூரியகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

"நீதித்துறைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, அது இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது" என்று உருவகமாக கூறி, புத்தகத்தின் மறுபதிப்பு, டிஜிட்டல் பரவல் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையான தடை விதித்தது. மேலும், என்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் மற்றும் கல்வித் துறை செயலருக்கு கோர்ட் அவமதிப்பு வழக்கு ஏன் தொடரப்படக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க: கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

இந்த கண்டனத்துக்கு பதிலடியாக, என்.சி.இ.ஆர்.டி. உடனடியாக நடவடிக்கை எடுத்தது. 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை முழுமையாக திரும்பப் பெற்றது. புத்தக விநியோகம் நிறுத்தப்பட்டது, ஆன்லைனில் கிடைக்கும் PDFக்களும் அகற்றப்பட்டன. 

"சில தவறான உள்ளடக்கங்கள் எதிர்பாராமல் சேர்ந்துவிட்டன" என்று கூறி, நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்ற மன்னிப்பு கோரியுள்ளது. "அத்தியாயம் 4க்கு (நீதித்துறையின் பங்கு) என்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் முழுமையான மன்னிப்பு கோருகிறோம். முழு புத்தகமும் திரும்பப் பெறப்பட்டு கிடைக்கவில்லை" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., நவோதயா, கே.வி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படும் இந்த புத்தகம், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற சவால்களுடன் ஊழலை ஒரு பிரச்சினையாக குறிப்பிட்டிருந்தது. 

ஆனால் உச்ச நீதிமன்றம் இதை நீதித்துறையை களங்கப்படுத்தும் முயற்சியாக பார்த்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. என்.சி.இ.ஆர்.டி. இனி பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த சம்பவம் கல்வி அமைப்புகள் மற்றும் நீதித்துறை இடையேயான உறவில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. மாணவர்களுக்கு சமூக சவால்களை கற்பிப்பது அவசியமா அல்லது நிறுவனங்களை பாதுகாக்க வேண்டுமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share