×
 

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம்! காரணம் நிலநடுக்கம் இல்லை! அமெரிக்க ஆய்வு மையம் வெளியிட்ட திடீர் விளக்கம்!

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே திடீர் வெள்ளப்பெருக்கு உருவானதாகவும் USGS தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தற்போது விளக்கம் அளித்துள்ளது. பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் காரணமாகவே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடரின் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தின் திபெத் எல்லையையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலங்கள், கரையோர கட்டடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த பேரிடரில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300 இந்தியர்கள் உள்ளிட்ட 570-க்கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நேபாளம் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முதற்கட்ட தகவல்களில், இந்த வெள்ளப்பெருக்குடன் நிலநடுக்கம் தொடர்புடையதாக கருதப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நில அதிர்வு பதிவானதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது USGS அளித்துள்ள புதிய விளக்கம் இந்தக் கருத்தை மாற்றியுள்ளது.

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே திடீர் வெள்ளப்பெருக்கு உருவானதாகவும் USGS தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பனிப்பாறை எதனால் உடைந்தது என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பனிப்பாறை சரிவின்போது ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நேபாளத்தை திடீரென தாக்கிய பெருவெள்ளத்தின் உண்மையான காரணம் குறித்து முன்பு நிலவிய குழப்பத்திற்கு தற்போது ஒரு முக்கிய விளக்கம் கிடைத்துள்ளது. இருப்பினும், பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் கண்டறியப்படாததால், பேரிடரின் முழுமையான பின்னணி குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share