கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!
கூட்டணிக்காக விஜய் வீட்டு கதவை எடப்பாடி பழனிச்சாமி தட்டிக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்தார்.
தமிழக அரசியலில் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எழுந்துள்ள மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இணைவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகப் பரவிய தகவல்கள்தான். இந்தப் பேச்சுகள் முதலில் பாஜகவின் தீவிர முயற்சிகளாகத் தொடங்கின.
பாஜக தலைமை, விஜய்யை என்டிஏ கூட்டணியில் இணைப்பதற்காக பல்வேறு வழிகளில் அணுகியதாகவும், தேர்தலுக்குப் பிறகு 2.5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி உட்பட பல சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. துணை முதலமைச்சர் பதவி மற்றும் 55 முதல் 80 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யும் பேச்சுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அதிமுகவின் தொகுதி பங்கீட்டுப் பணிகள் தாமதமாகி வருவதாகவும் ஊகங்கள் எழுந்தன.
அதிமுகவின் தலைமைக்கு இடையூறாக இருப்பதாகவும், "ஒரு நாட்டில் இரு அரசர்கள் இருக்க முடியாது" என்ற கருத்து அதிமுக தரப்பில் இருந்து வெளியானதாகவும் தகவல்கள் பரவின.இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் இந்தக் கூற்றுகளை மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. தவெகவின் மூத்த தலைவர்கள் உட்பட பலர், என்டிஏ அல்லது பாஜக உடனான எந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!
இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றி இருந்தார். அப்போது, தேர்தல் கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தட்டிக் கொண்டு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உதயகுமார் ஆகியோர் அதிமுகவை குழிதோண்டி புதைத்து விட்டதாக தெரிவித்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?