NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்..?? மீண்டும் தீயாய் பரவும் செய்தி..!! அரசியலில் அடுத்த ட்விஸ்ட்..!!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைய வாய்ப்புள்ளதாக மீண்டும் அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பாஜக தலைமை, தமிழகத்தில் தனது செல்வாக்கை விரிவாக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளை இணைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னேறி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த அமித் ஷா, திருச்சியில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தேர்தல் தயாரிப்புகள், கூட்டணி விரிவாக்கம், பூத் அளவிலான அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டணியை வலுப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், ஓபிஎஸ்-ஐ உடனடியாக இணைக்கும் பணியை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!
இதற்கு முன்னர், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அம்முக) உள்ளிட்ட கட்சிகள் என்டிஏ-யில் இணைந்துள்ளன. இத்தகைய இணைப்புகள் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஒப்புதலுடன் ஓபிஎஸ் இணைப்பு முயற்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தனித்து செயல்பட்டால் அவருக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்பது அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்து. ஆனால், சசிகலா அல்லது விஜய் போன்றோருடன் இணைந்தால் முக்குலத்தோர் உள்ளிட்ட சமூக வாக்குகள் பெருமளவு அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதால், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
மேலும், தேமுதிக தலைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரையும் கூட்டணிக்கு இழுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்டிஏ கூட்டணி தமிழகத்தில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கைகோர்த்தTwenty20: கேரள அரசியலில் சாபு ஜேகோப்பின் மாஸ்டர் பிளான்!