×
 

தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

கபினி அணை இரண்டு நாட்களில் எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிப்பு குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

காவிரி நீர் விவகாரம் மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ. சண்முகம், காவிரி கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் கபினி அணை இரண்டு நாட்களில் எப்படி நிரம்பியது என்று அவர் எழுப்பிய கேள்வி அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் கர்நாடக அரசுக்கு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டிருந்தன. ஆனால், அப்போது கர்நாடக அரசு அணைகளில் போதுமான நீர் இல்லை என்றும், குடிநீர் தேவையையே பூர்த்தி செய்ய சிரமம் இருப்பதாகவும் கூறி தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கு கர்நாடகாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டன.

இதற்கிடையில், கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. முதலில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் அது 10 ஆயிரம் கனஅடியாகவும், அதன்பிறகு 25 ஆயிரம் கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது. அணை வேகமாக நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: 'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!

இந்த சூழலில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் பெ. சண்முகம், இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு 'அணைகளில் தண்ணீரே இல்லை, குடிநீருக்கே பற்றாக்குறை' என்று கூறிய நிலையில், தற்போது கபினி அணை நிரம்பும் அளவுக்கு நீர் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி கண்காணிப்புக் குழு உண்மையான நிலையை முறையாக கண்காணித்ததா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தனது பதிவின் இறுதியில், "இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது" என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், காவிரி நீர் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: காவிரி பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்... உடன் செல்லும் 13 பேர் யார்? வெளியான முழு விவரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share