×
 

போர் நிறுத்தம் ஏற்படக் காரணம் மு.க.ஸ்டாலின் தான்... கருணாஸின் லொடுக்குப் பேச்சு..!

இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படியொரு முன்னெடுப்பை செய்யவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா எந்த மாநிலமும் இதை செய்யவில்லை.

மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணியால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “110 பக்க சாதனை புத்தகத்தில், பெண்களுக்கான திட்டங்கள், காலை உணவு திட்டம், 10,000 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இவை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குறிப்பாக, காலை உணவு திட்டத்தை பசியின் அருமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சித்தாந்தங்களை ஆதரிக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்காக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தேன். திமுகவின் 75-வது ஆண்டு பவளவிழாவில் முக்குலத்தோர் புலிப்படை தோழமைக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது பெருமை. எனது இயற்பெயர் கருணாநிதி. எனது குடும்பம் திமுக பின்னணியை கொண்டது. 

இதையும் படிங்க: தமிழ்நாடு சார்... ஷோ காட்டாதீங்க சார்.. தேசிய அளவில் வறுத்தெடுக்கப்படும் முதல்வரின் கான்வாய்..!

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை பயன்படுத்தி முதலமைச்சரானவர். பின்னர் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தார். அவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்திற்குள் அடைக்க முயன்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் தலைமையில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த சமுதாயத்திற்கு துணை நிற்பார். முக்குலத்தோர் சமுதாயத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ குலங்கள் உள்ளன.

ஜாதி ஒரு அடையாளம். ஆனால் உணர்வு நம்மை உயர்த்தும். வெறி நம்மை வீழ்த்தும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை. ஸ்டாலினின் ஆட்சி ஜாதி, மத, மொழி கடந்து அனைவருக்குமான ஆட்சியாக உள்ளது. ஸ்டாலினின் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து 5 கிலோமீட்டர் பேரணியை நடத்தினார். இந்த பேரணி முடிவதற்கு முன்பே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டார்கள். தளபதியின் சாதனைகளில் இதுவும் ஒன்று.

இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படியொரு முன்னெடுப்பை செய்யவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா எந்த மாநிலமும் இதை செய்யவில்லை. உலகத்திற்கே முன்னோடியாக திகழும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நிரந்தர முதலமைச்சராக இருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல்வரின் போதை இல்லா விளம்பரம்… வெறும் ஒன்றரை மாதத்தில் இத்தனை கோடிகள் செலவா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share