நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!
நீதி கட்சியின் முன்னோடி சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒரு முக்கிய வைரத்தூணாகவும், திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால முன்னோடியாகவும் அறியப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 138ஆவது பிறந்த தினம் இன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1888 ஜூன் 1ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள பெரும்பண்ணையூர் என்னும் ஊரில் பிறந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தஞ்சை மற்றும் திருச்சியில் கல்வி பயின்று, உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். பார்ப்பனரல்லாதோர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நீதிக்கட்சியின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், சென்னை மாகாணத்தின் நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
ஆங்கில அரசால் 'ராவ் பகதூர்' மற்றும் 'சர்' பட்டங்களால் கௌரவிக்கப்பட்ட அவர், திராவிட இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்திய முக்கிய பங்களிப்பாளராக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். 1940ஆம் ஆண்டு ஓமன் தீபகற்பத்தில் விமான விபத்தில் உயிரிழந்த அவரது நினைவு, தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறது.
இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!
இந்த 138ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை சபாநாயகர் ரவிசங்கர், திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பிரதீக் தயாள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!