×
 

டிக்..டிக்..டிக்...! வெடிச்சு சிதற போகுது... பார்லிமென்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!

நாடாளுமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி நகரில் உள்ள ஒன்பது பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அதே மின்னஞ்சலில் இந்திய நாடாளுமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: லோக் சபாவில் பரபரப்பு..! 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! பேப்பரை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதால் பதற்றம்..!

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல், டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு கூட உள்ள நிலையில் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share