×
 

மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன்குடம்..! தமிழில் பேசி தெறிக்கவிட்ட பவன் கல்யாண்..!

கலைஞர் கருணாநிதி ஆதரித்த ஒரே தேர்தல் முறையை அவரது மகன் ஸ்டாலின் எதிர்க்கிறார் என பவன் கல்யாண் கூறினார்.

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ் கடவுள் முருகனின் தமிழ்நாடு எனக் கூறி உரையை தொடங்கிய பவன் கல்யாண், அப்போது பேசியதாவது; தமிழகம் வள்ளுவரின் பூமி, சித்தர்களின் பூமி, நான் வணங்கும் தமிழ் கடவுள் முருகனின் பூமி, மகாகவியின் பூமி., எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் வாழ்ந்த பூமி தமிழ்நாடு, தமிழகம் மீது எனக்கு நல்ல மதிப்பு உள்ளது என்றார்.

ஒரே நாடு., ஒரே தேர்தல் பற்றி பொய்யான தகவல்கள் பரவுகிறது., இந்த விவகாரத்தில் சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என இரட்டை வேடம் போடுகிறார்கள். ஜெயித்தால் வாக்களிக்கும் மெஷின் சூப்பர் என சொல்வார்கள்., தோற்றுப் போனால் வாக்களிக்கும் மிஷின் மூலம் மோசடி என சொல்கின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்திருந்தால் அவர்களுக்கு பிடித்திருக்கும்., ஒரே தேர்தல் முறையை முதலில் வலியுறுத்தியவர் கலைஞர் தான்., கலைஞர் கருணாநிதி ஆதரித்த ஒரே நாடு ஒரே தேர்தலை அவரது மகன் ஸ்டாலின் எதிர்க்கிறார்... இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.

இதையும் படிங்க: 'பாக்., எலிகளே... நாகத்தின் மூச்சொலிக்கு முன் நிற்க முடியுமா..? திருக்குறளின் 2 அடியில் பவன் கல்யாண் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share