ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்!! அசாமில் கர்ஜித்த மோடி!!! தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பின் சூளுரை!
'அசாமில் பாஜ ஹாட்ரிக் வெற்றி பெறும். காங்கிரஸை மீண்டும் மக்கள் நிராகரிக்க தயாராகி விட்டனர்,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோகாமுக்: அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் நிராகரிக்க தயாராகி விட்டதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 9ஆம் தேதி அசாம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோகாமுக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் அசாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தேர்தலாக அமையும்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!
அசாம் மக்கள் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெறச் செய்வார்கள். காங்கிரஸ் கட்சியை மக்கள் மூன்றாவது முறையாக நிராகரிக்கத் தயாராகி விட்டனர்” என்று உற்சாகமாகக் கூறினார்.
பிரதமர் மோடி அசாம் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். மேடையில் முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த அவர், “அசாமில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனடையும். இதுவரை கான்கிரீட் வீடு கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு கேஜி முதல் பிஜி வரை இலவசக் கல்வி வழங்கப்படும்” என்றார்.
மேலும், “சுய உதவிக்குழு பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தில் தற்போது 3 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதை 40 லட்சம் பெண்களாக விரிவுபடுத்துவதே எங்கள் இலக்கு. கணவனை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம்” என்றும் பிரதமர் அறிவித்தார்.
அசாம் மக்களின் உற்சாகமான வரவேற்பைப் பார்த்த பிரதமர் மோடி, தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதமரின் பேச்சுக்கு உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.
அசாம் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரசாரம் பாஜகவுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. காங்கிரஸை மீண்டும் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவோம் என்ற பிரதமரின் நம்பிக்கை, அசாம் அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த பத்தாண்டுக்கு இதான் டார்கெட்!! வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? பிரதமர் மோடி அறிவிப்பு!