×
 

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, மதுரை வருவதை ஒட்டி ட்ரோன்கள், பலூன்கள் போன்றவற்றைப் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை மார்ச் 1-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பறக்கத் தடை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV), பலூன்கள் உள்ளிட்டவை பறக்க அனுமதி இல்லை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி காலை 11.45 மணியளவில் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதையொட்டி, புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்ட உத்தரவின்படி, உழவர்கரை, நகராட்சி பகுதிகள் உட்பட முழு பகுதியும் “நோ ஃப்ளை சோன்” (No Fly Zone) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வான்வழியில் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது பாரதிய நாகரிக பாதுகாப்பு சட்டம் 2023 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோடி என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்! அடிக்கடி போன்ல பேசுவோம்! ஐஸ் வைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) கோரிக்கையின் அடிப்படையில், நகராட்சி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விமான நிலையம், ஹெலிபேட் மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதேபோல், மதுரையில் பிற்பகல் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தரிசனம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடையை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை புதுச்சேரி சென்று ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் மதுரை சென்று ரூ.4,400 கோடி உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்து, என்டிஏ கூட்டத்தில் உரையாற்றி திரும்புகிறார். மொத்தம் ரூ.7,100 கோடி மதிப்பிலான வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் இந்தப் பயணம் அரசியல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருப்பதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share