“யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!
பாமகவில இரு தலைவர்களின் பிரச்சனையால் கட்சியின் கட்டமைப்பில் எந்த பாதிப்பும் இல்லை கட்சியில் ஒரு பொதுச்செயலாளர் தான் தனக்கு அந்த பொறுப்பு வழங்கபட்டுள்ளதை கொண்டாட முடியவில்லை என பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன், சமூக நீதி பேரவை தலைவர் கோபு, சேலம் மேற்கு எம் எல் ஏ அருள், வன்னியர் சங்க தலைவர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த பொதுசெயலாளர் முரளி சங்கர் மருத்துவர் அய்யா அடுத்த கட்ட திட்டங்களுக்கு வழி வகுத்து 2026 தேர்தல் தொடர்பாக ஒரு திட்டம் வகுத்துள்ளாதாகவும், அதற்காக செய்யப்படுவதுதான் இந்த புதிய பொறுப்பாளர்கள் நியமனம் என தெரிவித்த அவர் பாமகவில் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் ஆதரவாளர்கள் இல்லை மருத்துவர் அன்புமணியே, அய்யாவின் ஆதரவாளர் தான் என்றும் மருத்துவர் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
இருவரின் பிரச்சனையால் கட்சியின் கட்டமைப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை, இன்றைக்கு முன்னாள் நிர்வாகிகளாக இருந்தவர்கள் பலர் மருத்துவர் ராமதாசை சந்தித்த வருகின்றனர். அனைவருக்கும் மன உளைச்சல் உள்ளது மருத்துவர் ராமதாஸ் தன்னை பொதுச் செயலாளராக ஆக்கியது என் சமுதாயத்தின் வாழ்நாள் சாதனை என கூறினார். ஒரு குக்கிராமத்தில் இருந்து, பட்டியல் சமூகத்தில் மிகச் சிறிய எண்ணிக்கை கொண்ட ஒரு சமுதாயத்தில் இருந்து என்னை நியமனம் செய்துள்ளதாகவும் இதில் அன்புமணி பெயர் இல்லை,இருவரும் சேர்ந்து தன்னை நியமனம் செய்யவில்லை என்ற வருத்தம் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இவங்களுக்கு மட்டும் தான் அடுத்து எம்.எல்.ஏ. சீட் தருவேன்”... ஓபனாக உடைத்து பேசிய ராமதாஸ்... பாமகவில் பரபரப்பு!
மருத்துவர் ராமதாஸ் வீட்டில் சாப்பிட்டுள்ளேன் எனக்கு நன்றி உள்ளது அதனால் தான் எனக்கு பொறுப்பு கொடுத்ததை நான் கொண்டாடவில்லை இது கொண்டாடும் நேரமில்லை. யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இப்படியான சூழல் உள்ளது. இந்த சூழல்கள் சரியாக வேண்டும். மருத்துவர் ராமதாசும், அன்புமணியும் சந்திப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என கூறினார். மேலும் கட்சியினருக்குள் மன வருத்தம் உள்ளது, ஆனால் மனஸ்தாபம் இல்லை. தற்போது கட்சி மூளை முடுக்கலாம் சென்று சேர்ந்துள்ளது. பொதுக்குழு கூட்டங்கள் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்க மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். கட்சியில் பொதுச் செயலாளர் ஒருவர்தான் என பொதுச்செயலாளர் முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!