தவெக + காங்கிரஸ் கூட்டணி பெயர் வச்சாச்சு?! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு!
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தியை அறிவித்துள்ளது. இதையடுத்து, தனது தேர்வுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் பிரவீண் சக்ரவர்த்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தி, இந்த வாய்ப்பை மிகப்பெரிய பொறுப்பாக கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! ப.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!
தனது பதிவில், தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழ் மக்களின் குரலாக துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், கூட்டணியின் லட்சக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
வரவிருக்கும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் கூட்டணியின் எண்ணிக்கை பலம் காரணமாக, பிரவீண் சக்ரவர்த்தியின் வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவரது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேட்ட இலாகா கிடைக்கல! அமைச்சர் பதவியே வேணாம்! ராமலிங்க ரெட்டி ராஜினாமா! கர்நாடகாவில் பரபரப்பு!