×
 

கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

இல்லத்தரசிகள் திட்டத்தை பொதுமக்களிடம் எடுத்துக் கூற  “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” என பாட்டு பாடிய முதலமைச்சர்

புதுக்கோட்டை பாலன்நகர் அருகே உள்ள பள்ளத்தி வயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பரப்பரை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வேட்பாளர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் வேளல்ல மக்களை காக்கின்ற வேல் என்று கூறி வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

அப்போது ஆறு தொகுதி சட்டமன்ற வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், புதுக்கோட்டை திமுகவின் கோட்டை. தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க புது வரலாற்றைப் படைக்க புதுக்கோட்டைக்கு வந்துள்ளேன். புதுக்கோட்டையின் சிறப்பு குகை கோயில்கள் கல்வெட்டுகள் தொல்லியல் சின்னங்கள் என எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் சொல்லும் ஊர் தான் புதுக்கோட்டை.  இங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள் கீரனூர் முத்து விராலிமலை சண்முகம். இவர்கள் இருவரையும் பற்றி தற்போதுள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

மொழிப்போரில் தங்களது இன்னுயிரை  ஈர்த்தனர் இந்த இருவரும். தமிழுக்கு பாஜகவால் ஆபத்து வந்துள்ளது. பாஜகவையும் அவர்களை தூக்கி சுமக்கும் அடிமை அதிமுகவையும் வேரோடு வீழ்த்த வந்துள்ளேன்.  இந்த தேர்தல் யாருக்கானது இந்த தேர்தலில் வெற்றி அடையப்போவது தமிழ்நாடா டெல்லியா? தமிழ்நாட்டிற்கு எது தேவை மக்களாட்சியா? சர்வாதிகாரமா? இதுதான் மக்களின் தீர்ப்பும் பதிலும். 

இதையும் படிங்க: “அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!

ஏப்ரல் 23 அன்று ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் காட்ட வேண்டும் நிரூபிக்க வேண்டும். ஆட்சியின் மீது பரப்பக்கூடிய அவதூறுகளை ஆணித்தரமாக ஊடகம் மூலமாக பதிலளிக்க கூடியவர்கள் தான் திருமயம் வேட்பாளர் அமைச்சர் ரகுபதி. திராவிட மடல் அரசில் மாவட்டம் தொடங்கி ஊராட்சி வரை ஒவ்வொரு திட்டமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தை புத்தம் புதுக்கோட்டையாக மாற்றக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்ததால் தான் உரிமையுடன் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.  திராவிட மடல் அரசு செய்துள்ள சாதனைகளைப் பற்றி நிறைய செய்திகளை பார்த்திருப்பீர்கள். 

நமது அரசு ஒரு திட்டத்தை பயன்படுத்தினால் அது சாதனை திட்டமாகத்தான் இருக்கும். நம்முடைய சாதனைகள் தான் இந்தியாவுக்கே பென்ச் மார்க்காக இருக்கிறது.  கிரிக்கெட்டில் பல  பிளேயர்கள் பல ரெகார்டுகளை வைத்திருப்பார்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கரிடம் அனைத்து ரெக்கார்டுகளும் இருக்கும். 

அதேபோல்தான் அரசியலில் யாரும்  முறியடிக்கப்பட முடியாத பல ரெக்கார்டுகளை திமுக செய்துள்ளது. இனியும் நாம் தான் தொடர்ந்து ரெக்கார்ட் பிரேக் செய்யப் போகிறோம். நமது திட்டங்களை பார்த்து தான் பல மாநிலங்கள் காப்பியடிக்கின்றனர். ஒன்றிய அரசே நமது திட்டத்தை பார்த்துதான் காப்பியடிக்கிறது. மக்களுக்காக முன்னோடி திட்டங்களை செயல் படுத்துவதில் திமுக தான் ஒரிஜினல்.

பல திட்டங்களையும் செய்து வரும் என்னை பார்த்து கொரோனாவில் போயிருப்பேன் என்று எடப்பாடி பழனிச்சாமி வன்மமாக பேசியுள்ளார். இந்த ஸ்டாலின் இருந்து இன்னும் எனது மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்யத்தான் போகிறேன் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி பெற்ற மாநிலமாக நமது அரசு உயர்ந்துள்ளது.  இந்த அடித்தளத்திலிருந்து திராவிட மடல் 2.0 ஆட்சியில் புதிய பயணத்தை தொடங்க போகிறோம். 

அதற்கான திட்டம்தான் சூப்பர் ஸ்டார். இல்லத்தரசிகள் திட்டம். சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலை பாடி இல்லத்தரசி திட்டத்தில் கணவனிடம் கேட்காதீர்கள் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் உங்கள் கணவன் யாராவது முளைத்தால் அண்ணனிடம் சொல்லி விடுவேன் என்று கூறுங்கள்.

தமிழுக்கு பாஜகவால் ஆபத்து வந்துள்ளது. பாஜகவையும் அவர்களை தூக்கி சுமக்கும் அடிமை அதிமுகவையும் வேரோடு வீழ்த்த வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியால் இதுபோன்ற சாதனையை சொல்லி வாக்குகள் கேட்க முடியுமா? எங்கேயாவது கொள்கையை பேசி வாக்கு கேட்டுள்ளாரா?.பாதம் தாங்கி பழனிச்சாமியிடம் கொள்கைகளும் இல்லை சாதனைகளும் இல்லை. சாக்கடைக்கு சமமான சொற்களை சொல்லி அவர் தரமற்றவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

என் டி ஏ என்ற கூட்டணியை தமிழ்நாட்டிற்கு கொள்ளை புறமாக கூட்டி வர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதன்மை அடிமைதான் பழனிச்சாமி, அவர் பழனிச்சாமி அல்ல ஆமாம் சாமி அடிமை சாமி. அதிமுக எந்த கூட்டணியில் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து சேர்ந்துள்ளது என்றால் அன்னை தமிழுக்கும்  தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்கிற  என் டி ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது

பழனிச்சாமிக்கு உண்மையிலுமே தமிழ்நாடு மீது அக்கறை இருந்தால்  தர்மேந்திர பிரதான் தொடங்கி அமித்ஷா மோடி வரைக்கும் மேடையில் உட்கார வைத்து இது தமிழ்நாடு அண்ணா வழிவகுத்து கொடுத்த இரு மொழி கொள்கைதான் இருக்கும் என்று ஆணித்தரமாக பழனிச்சாமியால் பேச முடியுமா? ஒரு அடிமையால் முதலாளியை எதிர்த்து பேச முடியாது

மோடி ஜி வேர் இஸ் எல்பிஜி என்று பொதுமக்கள் கேட்டு வருகின்றனர். துரோகத்தில் டாக்டர் பட்டம் பெரும் அளவிற்கு எல்லோருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு வாய் கூசாமல் பொய்யை எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். தமிழுக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்வதுதான் ஒன்றிய பாஜக அரசின் வழக்கம். அதற்கு துணை போவது தான் அதிமுகவின் பழக்கம்.

அத்தனை துரோகத்தையும் கடந்து தான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம், டபுள் இன்ஜின் டப்பா இஞ்சின் என்று சொல்லி வருகின்ற nda கூட்டணி தமிழ்நாட்டிற்கு வந்தது என்றால் மீண்டும் தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளி விடுவார்கள். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக கூட்டணி கட்சி வெற்றிக்காக அல்ல தமிழ்நாட்டின் வெற்றிக்காக எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share