×
 

புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய கட்சியில் இணைந்த பிறகு, அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

கட்சியின் தலைமையகமான பனையூரில் நடைபெற்ற நிகழ்வுகளில், முதலமைச்சர் தரப்பினர் நேரடியாக அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கட்சிப் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டதாகவும், அவருடைய நடவடிக்கைகள் முதலமைச்சர் தரப்பின் கவனத்தை ஈர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிக பரபரப்பாக செயல்பட்டாலும், அவருக்கு எதிர்பார்த்த அளவிலான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

இதையும் படிங்க: "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!

புதிய கட்சியில் இணைந்த நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்தபோது, கரூர் விஜயபாஸ்கரிடம், "கரூரில் கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சந்திப்பின்போது புதுக்கோட்டை விஜயபாஸ்கரிடம் தனிப்பட்ட முறையில் எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, கரூர் விஜயபாஸ்கருடன் முதலமைச்சர் தரப்பினர் இரு முறை தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம், புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு ஒன்றியச் செயலாளர் பதவிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் பர்வேஸிடம் சி. விஜயபாஸ்கர் பட்டியல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த கோரிக்கையை அமைச்சர் பர்வேஸ் ஏற்க மறுத்ததாகவும், "மாவட்ட நிர்வாக விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஏதேனும் கோரிக்கை இருந்தால் கட்சித் தலைமையிடம் தெரிவியுங்கள்" என்று திட்டவட்டமாக கூறியதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share