×
 

காங், கம்யூனிஸ்ட் சிக்கிட்டாங்க! திமுக எம்பிக்கள் தப்பியது எப்படி? சஸ்பெண்ட் பட்டியலால் அதிமுக சந்தேகம்!

சமீபத்தில் ராகுலுக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் உள்ளிட்ட இண்டி கூட்டணியைச் சேர்ந்த எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பெரும் அமளியாக மாறியது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சீன ஆக்கிரமிப்பு குறித்து பேசினார். முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் நரவனே எழுதியதாகக் கூறப்படும் வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, சீனா இந்திய நிலப்பரப்பில் ஆக்கிரமித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆனால் வெளியாகாத புத்தகத்தை ஆதாரமாகக் காட்டி பேசுவதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை முன் காகிதங்களைக் கிழித்து வீசினர். சபாநாயகரின் எச்சரிக்கையை மீறியதால், 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த 8 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் திமுக எம்பிக்கள் யாரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 8 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! பார்லி-யில் அமளி!! மக்களவை ஒத்திவைப்பு! எம்.பிக்கள் போராட்டம்!

இதுகுறித்து அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். “பார்லிமெண்டில் காங்கிரஸுக்கு ஆதரவாக சலங்கை கட்டி ஆடுவதில் திமுக எப்போதும் முன்னிலை வகிக்கும்.

சமீபத்தில் ராகுலுக்கு ஆதரவாக போர்க்கோலம் பூண்டு நின்று, தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அந்தப் பட்டியலில் திமுக எம்பி ஒருவர் கூட இல்லையே, அது ஏன்?” என்று கேட்டுள்ளார்.

திமுகவின் இந்த அமைதி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. சிலர் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடாமல் இருந்ததால் தவிர்க்கப்பட்டதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மறைமுக பதற்றத்தை இது காட்டுவதாக வாதிடுகின்றனர். ராகுல் காந்தியின் பேச்சு சீனா விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், திமுக எம்பிக்கள் அதில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் இண்டியா கூட்டணியின் உள் இயக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதிமுக இதை பயன்படுத்தி திமுக – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் களத்தில் புதிய சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என் புள்ள தீவிரவாதியா? வயிறு எரியுது..! நிகிதாவை கைது பண்ணுங்க..! அஜித் தாய் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share