படுத்து ஆய்வு செய்த தவெகவின் மைக் டைசன்... அமைச்சர் ராஜ்மோகனை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!
சட்டத்தை மதிக்க வேண்டிய அமைச்சர் ராஜ்மோகன் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டால், சாதாரண மக்கள் எப்படி அதை எடுத்துக் கொள்வார்கள்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் எடுப்பதற்கு ஆய்வு என்ற பெயரிலே அடிக்கிற அட்ராசிட்டிகளும் கூத்துகளும் நடைபெறுகிறது இதனால்,தலை நிமிர்ந்த தமிழகம் இன்றைக்கு தலை தாழ்ந்து நிற்கிறது.
நேற்று கூட எங்கே சென்றாலும் த.வெ.க.வின் மைக் டைசனாக இருக்கிற அமைச்சர் ராஜ் மோகன் கீழடியிலே ஆய்வுக்கு செல்வதற்கு முன்பாக சமணர் படுகையில் போய் படுத்து ஆய்வு செய்தார்.எனக்குத் தெரிந்து இந்தியாவிலே ஒரு அமைச்சர் படுத்து ஆய்வு செய்து இருக்கிறார் என்றால் அமைச்சர் ராஜ்மோகன் தான். ஏனென்றால் ரீல்ஸ்க்கு படுத்து ஆய்வு செய்கிற அந்த காட்சி இதுவரை யாரும் பார்த்ததில்லை அது அவருடைய விருப்பம், அது மக்களுடைய மனசாட்சிக்கே நாம் விட்டுவிடுகிறோம்.
ஆனால் தாய்மொழி என்று சொல்லுகிற கீழடியிலே அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்ததை ரீல்ஸ் போடுவதற்காக த.வெ.கவை சேர்ந்தவர்கள் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்கள். ஆனால் இதை அமைச்சர் தடுக்கவில்லை.ரீல்ஸ் எடுத்தால் உங்களுக்கு என்ன, ட்ரோன் பறந்தால் உங்களுக்கு என்ன என்று நாம் கடந்து போய்விட முடியாது.
இதையும் படிங்க: முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
ஏனென்றால் கீழடியிலே ட்ரோன் பறப்பவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அவசிய அத்தியாவசிய தேவையாக ட்ரோன் மூலமாக நாம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் உள்ளூர் காவல்துறை, தொல்லியல் துறை, விமான போக்குவரத்து துறை என்று இவர்களிடத்திலே முறையான அனுமதி பெற்றுதான் எடுக்க வேண்டும்.மத்திய அரசு விதித்திருக்கிற இந்த தடையை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்,
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைப் போல கீழடியிலே ட்ரோன் பறக்க தடை இருந்தும் த.வெ.க கட்சியினரை யாரும் தடுக்கவில்லை. த.வெ.கவினர் தடையை மீறி வீடியோ எடுத்த செயல் அதை ஒரு அமைச்சரே சட்டத்தை மீறலாமா? சட்டத்தை மதிக்க வேண்டிய அமைச்சரே சட்டத்தை காட்டிலே பறக்கவிட்டால் சாதாரண மக்கள் எப்படி அதை எடுத்துக் கொள்வார்கள்?
அதேபோன்று இனி பள்ளிகளிலே ரீல்ஸ் எடுக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசாணை வெளியிட்டார் . ஆனால் நேற்று முன்தினம் கூட பச்சிளம் குழந்தைகளின் இதயத்திலே நஞ்சை விதைக்கின்ற வகையிலே பொட்டு மாமாவுடைய (விஜய்) திருவுருவ படத்தை அங்கே வைக்கிறோம் என்று சொல்லி பள்ளிக்கூடத்தில் த.வெ.கவினர் வைக்கிறார்கள்
முதல்வர் திருவுருவ படத்தை வைப்பதற்கு அரசிலே பிஆர்ஓ இருக்கிறார்கள். அந்த வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே வகுப்பறைக்குள்ளே அடாதடியாக உள்ளே நுழைந்து அட்ராசிட்டியை ஏற்படுத்தி முதல்வர் படம் என்று ரீல்ஸ் எடுப்பது இன்னும் குறைந்தபாடு இல்லை. நாங்கள் உத்தரவு போட்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். ஒருவேளை உத்தரவு போட்டவரே சட்டத்தை மீறுவோராக இருக்கிற காரணத்தினாலோ என்னவோ அவர் உத்தரவையும் செயல்படுத்த யாரும் தயாராக இல்லை.
ஏற்கனவே பாஸ்போர்ட் விவகாரத்தில் வெளிநாட்டிற்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டிலே சென்றார்களா, ரெகுலர் பாஸ்போர்ட்டிலே சென்றாராகளா பள்ளி கல்வித்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் என்கிற அந்த சர்ச்சையிலே சிக்கியுள்ளவர்களின் உரிய விளக்கம் இன்னும் அரசு சார்பிலே வெளிவரவில்லை.
ஏனென்றால் வெளியுறவுத்துறையின் அனுமதியை பெற்றார்களா மத்திய அரசினுடைய அனுமதியை பெற்றார்களா வெளிநாடுகளுக்கு இப்படி அமைச்சர்கள் சென்று வருவது என்பது ஒரு அப்பட்டமான விதிமுறை மீறல். தெரியாமல் செய்கிறார்களா, தெரிந்து செய்கிறார்களா என்று தெரியவில்லை.
நாங்களும் அரசு முறை பயணமாக அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதற்காக மத்திய அரசு அனுமதி பெற்று எங்களைப் போன்ற அமைச்சர்களை எல்லாம் எடப்பாடியார் அழைத்துச் சென்றார் அப்போதெல்லாம் அந்த வழிமுறைகள் சட்ட முறைகள் விதிமுறைகள் எல்லாம் கடைபிடிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 10 நாளிலே வெளிநாடுகளுக்கு செல்கிற அந்த ஆசையாக இருக்கலாம். அல்லது அவசியமாகவும் இருக்கலாம். ஆனால் முறையாக செல்ல வேண்டும்
ஒருபுறத்திலே அமைச்சர் போதை பொருள் பயன்படுத்துகிற சர்ச்சை, நாடெல்லாம் த.வெ.க கட்சிக்காரர்கள் ரீல்ஸ் பயன்படுத்துவதிலே சர்ச்சை, இன்னொரு புறம் பழனி தேவஸ்தானம் இடத்தை கொள்ளையடித்துக் விட்டார்கள் என்கிற சர்ச்சை,
ஆகவே சர்ச்சையை சுற்றி த.வெ.க. அரசா அல்லது த.வெ.க அரசைச் சுற்றி சர்ச்சையா என்று நமக்கு புரியவில்லை தெரியவில்லை.
இப்படி நாடு முழுவதும் சர்ச்சையாக உள்ளது ஆனால் ஒரு வார்த்தை கூட த.வெ.க அரசின் முதலமைச்சர் விஜய் எந்தவிதமான விளக்கமோ ,கருத்தோ அது குறித்து அறிக்கையோ அவர் கொடுக்க முன்வருவதில்லை. தமிழர்களுடைய தலையிலே இடியே விழுந்தாலும் எது நடந்தாலும் மௌனம் சம்மதத்துக்கு அறிவுறியா அல்லது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்களா எதுவுமே தெரியவில்லையே
இந்த 75 நாளிலே கூட்டணி கட்சிக்குள்ளே யார் த.வெ.கவை தூக்கிப் பிடிப்பது என்பதிலே அடிக்கிற அந்த அட்ராசிட்டிக்கு மத்தியிலே, த.வெ.க ரீல்ஸ் அட்ராசிட்டி முடிவுக்கு வருமா என்டு கார்டு போடுவாரா விஜய் . மாற்றம் தமிழ்நாட்டு மக்களுக்கு பலம் தருமா, பொறுத்திருந்து பார்ப்போம் மௌனம் தமிழ்நாட்டு மக்களுக்கு பலன் தந்தால் நல்லது அது பலவீனமானால் எங்கே போய் முடியுமோ பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் விஜய்க்காக விளையாடிய பல கோடி... கன்டெண்ட் லிஸ்ட்டோடு பகீர் கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்...!