×
 

மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

மோடியால் செய்ய முடியாததை அமித் ஷா செய்து முடித்துவிடுவாரா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் கடந்த வாரம் திமுக தரப்பில் பிரம்மாண்டமாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் திமுக பொதுக்குழு நடத்திய மதுரையின் அதே பகுதியில் பாஜக நாளை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.

இன்று இரவு மதுரை வரும் அமித் ஷா, தென் மாவட்ட தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கிறார். இதனால் மாநில அளவிலான பாஜக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் அமித் ஷா வருகை குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான்..

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட நரேந்திர மோடி 8 முறை வந்து சென்றார். அதன்பின்னரும் திமுக கூட்டணி 40க்கு 40 வென்று சாதித்தது. அதனால் அமித் ஷா வந்துவிட்டு போகட்டும். மோடியை விடவா அமித் ஷா பெரிய நிர்வாகி. இதனை அவர்கள் முடிவு செய்யட்டும். மோடியால் முடியாததை ஷாவால் முடியும் என்றால், அந்த முடிவை அவர்களிடம் விட்டுவிடுகிறோம்.

மோடி வந்த போது, ரோடு ஷோ கூட செய்தார். அதன்பின்னரும் திமுக வென்றது என்று தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் இந்த முறையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share