×
 

சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

சசிகலா தனது கட்சிக்காக அறிவித்துள்ள தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்து என நெட்டில் தோண்டி துருவி நெட்டிசன்கள் சுவாரஸ்யமான தகவல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். 

“நாங்க தனி மரம் இல்ல தோப்பு” என எடப்பாடி பழனிசாமிக்கு அறிவிப்பது போல் களமிறங்கியுள்ளார் வி.கே.சசிகலா. சரி, அவர் அறிமுகப்படுத்திய தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்தது என பார்க்கலாம் வாங்க....

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்திய நிலையில், நேற்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரையும் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார். இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதையும் படிங்க: அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ராமநாதபுரம் ​மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப். 24ஆம் தேதி சசிகலாவின் ஆதரவாளர்கள் நிகழ்வு ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்ட சசிகலா, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தவிர, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

 இதனையடுத்து நேற்று “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என தன் கட்சியின் பெயரை அறிவித்ததுடன், 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தையும் தேர்வு செய்துள்ளார்.

அப்போது சசிகலா, “நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர, வேறு எண்ணமே எனக்குக் கிடையாது. அதனால் நான் மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்தச் சின்னமே ஒரு சான்று. நாங்கள் ஒரு கூட்டுக்குடும்பம்” என்றெல்லாம் பேசியிருந்தார். 

இதனிடையே, சசிகலா தனது கட்சிக்காக அறிவித்துள்ள தென்னந்தோப்பு சின்னம் இதற்கு முன்பு யாரிடம் இருந்து என நெட்டில் தோண்டி துருவி நெட்டிசன்கள் சுவாரஸ்யமான தகவல்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ஜி.கே.வாசன் உடைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 2016 மற்றும் 2019களில் நடந்த தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் பொது சின்னமாக தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த த.மா.கா. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது. அதன் பின்னர் 2019ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்தக் கட்சியினருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தென்னந்தோப்பு சின்னத்தை பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

சரி, கிராமப்புறங்களில் தென்னந்தோப்பு சின்னம் மிகவும் பிரபலமானது எளிதில் வாக்குகளை அள்ளிவிடலாம் என நினைத்த ஜி.கே.வாசனுக்கு அது பெரிதாக கைகொடுத்ததாக தெரியவில்லை. அதேபோல் முதல் முறையாக கட்சி ஆரம்பித்துள்ள சசிகலாவிற்கு அவர் சொல்வது போல தென்னந்தோப்பு சின்னம் கை கொடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம். 

இதையும் படிங்க: தவெகவிற்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... சசிகலா - ராமதாஸ் திடீர் சந்திப்பின் பரபர பின்னணி... உருவாகிறது புதிய கூட்டணி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share