×
 

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

ஒரே நாடு ஒரே ஒரே வரி ஒரே ரேஷன் கார்டு ஒரே தேர்தல் என்கிறார்கள் ஆனால் ஒரே நதி இல்லை. நதி நீர் உள்ளிட்ட விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாடு எங்கே போனது.

திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய சீமான் கூறியதாவது: புபாஜக காங்கிரஸ் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு கிடையாது. நாம் நம் மனசான்று வழிநடத்தும் வழியில் சென்று கொண்டிருக்கிறோம். நாம் பேசும் அரசியல் இன வெறி அரசியல் என சிலர் பேசுவார்கள் அதை எந்த காதிலும் வாங்காதீர்கள். நாங்கள் செய்யும் அரசியல் இன வெறி அரசியல் அல்ல இன உரிமைக்கான அரசியல். இன்று ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள் வீதியில் போராடி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலத்தை நான் ஆள வேண்டும் என கூறுவது என் உரிமை. இது மாநில உரிமைகளிலே முதன்மையானது. ஒரே நாடு ஒரே ஒரே வரி ஒரே ரேஷன் கார்டு ஒரே தேர்தல் என்கிறார்கள் ஆனால் ஒரே நதி இல்லை. நதி நீர் உள்ளிட்ட விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாடு எங்கே போனது.

காவிரியில் உரிமையை பிரித்து தரவில்லை என்றால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலை உருவாக்க வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது காங்கிரஸ் அதை கைகட்டி வேடிக்கை பார்த்தது திமுக. இந்திய அமைச்சர் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் கச்சத்தீவு மீட்கப்படும் என இந்த திராவிடம் கூறும் வரும் தேர்தல் அறிக்கையில் அதுவும் வராது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் பாஜக இரண்டும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. அந்த இரண்டு கட்சிகளோடு தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் நாம் வேட்டு வைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு தண்ணீர் வாங்கி தர முடியாதவர்கள் பெரியாருக்காக போராடுகிறார்கள். ஓராயிரம் பெரியார் என் இன உறவில் இருக்கிறார்கள்

அம்பேத்கருக்கு முந்தி சிந்தித்தவர் அயோத்திதாசர். இழந்த உரிமையை மீட்க இருக்கும் உரிமையை காக்க நாங்கள் எழுந்து வந்து கொண்டிருக்கிறோம். இதற்கு குறுக்கே எங்களை பெற்ற தாய் தந்தையர் வந்தாலும் அவர்களே எங்களுக்கு எதிரி தான். தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள் ஒரே கோட்டில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி வேற கோட்டில் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஈவேராவின் பக்கம் நாங்கள் எங்கள் தலைவரின்  பக்கம். அவர்கள் இரு மொழிக் கொள்கை நாங்கள் கொள்கை முன்னே ஒன்றுதான் அது தமிழ் மொழி. விரும்பினால் எந்த மொழியும் கற்போம் நாங்கள் வாழ.. எங்கள் இனம் வாழ எங்கள் மொழி தமிழ் கற்போம். அவர்கள் கூறுவது இலவசம் நாங்கள் ஏழ்மை நிலை இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். அவர்கள் திராவிடர்கள் நாங்கள் தமிழர்கள்.

இதையும் படிங்க: திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல திராவிடம் என்பது தமிழ் தேசியத்தின் புண். திமுக, அதிமுக என எல்லோரையும் காலி செய்ய நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்.
தீமையை ஒழிக்க நேர்மை தான் தேவை. அதற்காகத்தான் நேர்மையானவர்களாக நாங்கள் தனித்து நிற்கிறோம். இலவசம் என்பது ஒரு வீழ்ச்சி திட்டம் அது கவர்ச்சி திட்டம். 10 லட்சம் கோடி கடன் பெற்ற இந்த அரசு எந்த நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நாட்டில் பசியை போக்க வேளாண்மையை அரசு தொழிலாக மாற்றுவேன். அதன்மூலம் வேலை வாய்ப்பு வளர்ச்சியும் பெருகும். 

அரசியல்வாதிகள் தேர்தலை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்கள். தலைவர்கள் தான் அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பார்கள். அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவர்கள்  நாங்கள் தான். ஸ்டாலின் ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறார், ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டார். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யப்போவதில்லை. ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் இந்த நிலத்தை நாங்கள் மாற்றி காட்டுகிறோம் அப்படி செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் எங்களை தோல்வியடைய செய்யுங்கள் தோல்வி ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. 

இந்தக் கப்பல் நிச்சயமாக உங்களை கரை சேர்க்கும் நம்பிக்கையோடு எங்கள் கப்பலில் வந்து ஏறுங்கள். 2016  ல் நாங்கள் முதன்முறையாக போட்டியிட்டோம் அது முயற்சி அதில் தோல்வி அடைந்தோம்.  2019ல் போட்டியிட்டோம் அது தொடர் முயற்சி அதிலும் தோல்வி அடைந்தோம். 2021 ல் போட்டியிட்டோம் அது விடாமுயற்சி அதிலும் தோல்வி அடைந்தோம். 2026 ல் போட்டியிடுகிறோம் இது விடாமுயற்சி அல்ல அடர்த்தியான நம்பிக்கை.

வந்தவர்களை வாழ வைத்தவர்கள் தம் சொந்தப் பிள்ளைகளை ஆள வைப்பார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் நாங்கள் நிற்கிறோம். ஜாதியாக இருந்த தமிழ் சமூகம் இன்று தமிழர்களாக எழுந்து வருகிறது எது வரலாற்றில் எப்பொழுதும் நடைபெறவில்லை. நடிகரை நேசிப்பவர்கள் மட்டுமல்ல நாட்டை நேசிப்பவரும் பேரெழுச்சியாக கூடுவான் என்பதை காட்டும் மாநாடு தான் இன்றைய மாநாடு. 234 தோட்டாக்களை களத்தில் இறக்குகிறேன். இவர்கள் வேட்பாளர்கள் அல்ல தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடும் முன்கள வீரர்கள். ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பொழுது கூட சிறு சிறு பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை விட கவனமாக தமிழ் தேசிய ராணுவத்திற்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன் என்றார். 

இதையும் படிங்க: காரைக்குடியில் களம் காணும் சீமான்... நா.த.க.வின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share