2 வாரமா லண்டன்ல என்ன பண்ணுறார் மு.க.ஸ்டாலின்! முதல்வர் விஜய் டேபிளில் உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்!
ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லண்டன் பயணத்தைச் சுற்றி அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது பயணம் தொடர்பான ஒவ்வொரு அசைவையும் அறிய தமிழக மாநில உளவுத்துறை தீவிரமாக தகவல் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவும், குடும்பத்துடன் ஓய்வு எடுக்கவும் ஸ்டாலின் கடந்த ஜூலை 4-ஆம் தேதி லண்டன் சென்றார். அவர் ஜூலை 18-ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது ஸ்டாலின் யாரை சந்திக்கிறார், அவரை யார் சந்திக்கிறார்கள், அரசியல் அல்லது வேறு முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகிறதா என்பது உள்ளிட்ட தகவல்களை அறிய மாநில உளவுத்துறை முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!
ஆனால் லண்டனில் போதுமான தகவல் வலையமைப்பு இல்லாததால், தகவல் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய உளவுத்துறையின் உதவியையும் மாநில அதிகாரிகள் நாடியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்தபடியே தமிழக அரசியல் நிலவரங்களை ஸ்டாலின் தினமும் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய உரைக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் திமுக மூத்த நிர்வாகி சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து விஜய்யின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் விஜய்யின் பேச்சுக்கு உடனடி எதிர்வாதங்களை பதிவிட திமுக ஐ.டி. பிரிவுக்கும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் இருந்தபடியே கட்சியின் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல மு.க.ஸ்டாலின் முதல்வராவார்!! திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்!