×
 

வைத்திலிங்கம் முகத்தில் இருந்த சோர்வு! நிம்மதி உங்களுக்கும் இருக்காது! எனக்கும் இருக்காது! போட்டு உடைத்த ஸ்டாலின்!

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்து சின்னாபின்னாமாகி இருந்த நிலையில், வைத்திலிங்கம் சட்டசபையில் அமர்ந்து இருக்கும் காட்சியை நான் பார்ப்பேன். அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டு இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடைபெற்ற திமுக இணைப்பு விழாவில், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வைத்திலிங்கத்தின் அரசியல் பயணத்தையும், அதிமுகவில் அவர் எதிர்கொண்ட சோர்வையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், “இது இணைப்பு விழாவா? இணைப்பு மாநாடா? என்று எண்ணும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் பேசாமல் போனால் உங்களுக்கு நிம்மதி இருக்காது, எனக்கும் நிம்மதி இருக்காது” என்று கூறி தொடங்கினார். 

பின்னர், “நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அவர் சுறுசுறுப்பாக பணியாற்றிய காட்சியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்து சின்னாபின்னமான நிலையில், சட்டசபையில் அமர்ந்திருந்த வைத்திலிங்கத்தின் முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. வேண்டா வெறுப்போடு சில கேள்விகளை கேட்பார். உள்ளத்தில் சுயமரியாதையுடன் இயங்க முடியவில்லையே என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: மகனுக்கு சீட் வேணும்!! வைத்திலிங்கம் வைக்கும் டிமாண்ட்! திமுக தாவியதின் பின்னணி!!

“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வைத்திலிங்கம் பணியாற்றப் போகிறார். தேர்தல் நெருங்கி வருகிறது. நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். இணைந்து இருக்கும் தொண்டர்களையும், வைத்திலிங்கத்தையும் வரவேற்கிறேன். தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம். சபதம் ஏற்போம்.

மீண்டும் திமுக அரசு உதயமாகி ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சக்கூடிய பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணிகள் மும்முரமாக இருக்க வேண்டும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. ஒன்றாக வெல்வோம்” என்று உரை நிகழ்த்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த இணைப்பு விழா, ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து தொடர்ந்து திமுகவுக்கு வந்து கொண்டிருக்கும் மூத்த தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. வைத்திலிங்கம் அணியினர் திமுகவில் இணைந்ததன் மூலம் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கி மேலும் வலுப்படும் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஸ்டாலினின் உரை, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

இதையும் படிங்க: அமித்ஷா போட்ட ப்ளான்! சப்தமில்லாமல் முடித்துவிட்ட ஸ்டாலின்! திமுக தரமான செய்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share