×
 

ரூ.11,526 கோடி!!! திமுக ஆட்சியில் அரசு துறைகளில் பயன்படுத்தப்படாத பணம்!! கருவூலத்தில் ஒப்படைப்பு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முடங்கிக் கிடந்த11,526 கோடி ரூபாய் பொது நிதி, நிதித்துறையின் சிறப்புப் பணிக்குழு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு, அரசின் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்த 11,526 கோடி ரூபாய் பொது நிதியை நிதித்துறையின் சிறப்புப் பணிக்குழு மீட்டெடுத்து அரசின் கருவூலத்தில் செலுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அரசு நிதி நிர்வாகத்தில் பெரும் சீர்திருத்தமாகப் பார்க்கப்படுகிறது.

அரசு திட்டங்களுக்காக ஒவ்வொரு துறைக்கும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பல துறைகளில் இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக வங்கிக் கணக்குகளில் முடங்கிக் கிடந்தது. இந்த நிலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை சார்பில் ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முழுமையான ஆய்வு மேற்கொண்டதில், 2021 நவம்பர் 1 முதல் 2025 ஜூன் 24 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11,526 கோடி ரூபாய் இருப்பு கண்டறியப்பட்டது. உள்ளாட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிக அளவில் நிதி முடக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

தேனி ராம்கி என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதன் மூலம் இந்த விவரங்கள் வெளியாகின. அதிகாரிகள் தரப்பில், “ஒரு ரூபாய் கூட மீதமிருந்தாலும் அதையும் மீட்டெடுக்கும் வகையில் சிறப்புப் பணிக்குழு செயல்பட்டது. மொத்தத் தொகையும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நிதி முடக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கும், ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்துவதற்கும் உதவும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படவும், அரசு வருவாய் சரியாகப் பயன்படுத்தப்படவும் இந்த மீட்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நிதி ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த மேஜர் விக்கெட்! தவெக தாவ தயாராகும் கே.சி.பழனிசாமி! ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share