×
 

இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

சி.வி.சண்முகம், வேலுமணிக்கு ஆதரவாக 25 பேர் செயல்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு தனிநபராக தோல்வியையும், துரோகத்தையும் சுமந்து கொண்டு, சட்டசபையில் உரையாற்றினார்.

தமிழக அரசியல் களத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், கட்சித் தாவல், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மாற்றம், ராஜினாமா மற்றும் தகுதி நீக்க விவகாரங்கள் புதிய அரசியல் திருப்பங்களை உருவாக்கியுள்ளன. ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை கணக்குகள் தொடங்கி, தற்போது சபாநாயகரின் முடிவை நோக்கிய எதிர்பார்ப்பு வரை அரசியல் சூழல் தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளது.

தேர்தல் முடிவில் தனிப்பெரும் பெரும்பான்மையை எட்ட முடியாத நிலையில் இருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, முதலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவும் படிப்படியாக கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் கணக்குகள் வேகமாக மாறின.

இதற்கிடையில், அ.தி.மு.க.வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சித் தலைமையின் நிலைப்பாட்டுக்கு மாறாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பான விவாதங்களும் தீவிரமடைந்தன.

இதையும் படிங்க: விசிக-வில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்!! அதிருப்தியாளர்களுக்கு தடை போட்ட மு.க.ஸ்டாலின்! கறார்!

பின்னர் அந்த 25 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டு, தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் கணக்கில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மற்றொரு முக்கிய திருப்பமாக, ஆதரவு மாற்றிய எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் மீண்டும் கட்சித் தலைமையுடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மன்னிப்பு கோரி கடிதங்கள் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர்களை மன்னித்து பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அனைத்து தரப்பினரின் மனுக்கள் மற்றும் புகார்கள் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளன. எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்கப்படுமா, மன்னிப்பு வழங்கப்படுமா, அல்லது நீதிமன்றத்தில் புதிய சட்டப்போராட்டம் தொடங்குமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: இத திமுக ஆட்சியில கேப்பீங்களா? காலி பண்ணிருப்பாங்க! பிரஸ்மீட்டில் டென்ஷனான செங்கோட்டையன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share