மயிலாப்பூரில் மாற்றத்தின் அலை..! தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வாக்குச் சேகரிப்பு..!!
மயிலாப்பூரில் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் களம் காணும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வாக்குச் சேகரித்தார்.
மயிலாப்பூர் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க சட்டமன்றத் தொகுதியாகும். கடந்த சில தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. 2021ஆம் ஆண்டு திமுகவின் த.வேலு இங்கு வெற்றி பெற்றார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பங்காளியான பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது. மார்ச் 2026 இறுதியில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து திறந்த வேனில் பிரசாரம் செய்யத் தொடங்கியதிலிருந்தே அவர் இந்தத் தொகுதியுடன் தொடர்புபடுத்தப்பட்டார்.
ஏப்ரல் 6 அன்று, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசை, “சூரியன் இல்லை, தாமரை மட்டுமே மலரும்” என்று உறுதியுடன் கூறினார்.தமிழிசை சௌந்தரராஜன் பரப்புரை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் பரப்புரையின்போது விபத்து..! தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்குகள்..!!
மயிலாப்பூரில் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் களம் காணும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வாக்குச் சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மயிலாப்பூரில் ஒரு மாற்ற அலை வீசுகிறது என்று தெரிவித்தார். தமிழிசை இங்கிருந்து அடுத்த சட்டமன்ற உறுப்பினராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மயிலாப்பூர் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பார் எனவும் நாம் காணும் வரவேற்பே, வரவிருக்கும் தேர்தலில் தமிழிசை ஜியின் வெற்றிக்குப் போதுமான சான்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு அதிகாரிகளை மாற்றினால் திமுகவுக்கு என்ன கஷ்டம்.? இபிஎஸ் சரமாரி கேள்வி..!