×
 

“இரட்டை இலையுடன் தாமரை மலரும்” - அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குண்டைத் தூக்கிப்போட்ட தமிழிசை...!

நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல்லில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பாரதப் பிரதமர். அபிராமி அம்மன் கோவில் திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் இருந்தது திப்பு சுல்தான் காலத்தில் கீழே கொண்டு வந்து வைத்து விட்டனர் அதை மீண்டும் மேலே கொண்டு சென்று வைப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பாக இருக்கிறது

நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலை யுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஸ்கிரிப்ட் ஒழுங்கா எழுதி கொடுங்கப்பா... கலாய்த்த தமிழிசை..!!

வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் இது குறித்த கேள்விக்கு,  வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேம் என்று சொல்கிறார்கள். பாரதப் பிரதமர் ஆப்ரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பாரத பிரதமர் வெற்றி பெறுவார். ஏற்கனவே விஜய்க்கு பதில் சொல்லிவிட்டு அவர் மாநில அரசையும் குற்றம் சாட்டுகிறார். 

இதையும் படிங்க: TIME OVER... திமுகவுக்கு நேரம் நெருங்கிடுச்சு! எச்சரித்த தமிழிசை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share