×
 

சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த முறையை காட்டிலும் அதிகம்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குகள் பதிவாகின. இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்த கையோடு சென்னையிலிருந்து குடும்பத்தோடு துபாய் புறப்பட்டுச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு உதயநிதி மட்டும் சென்னை திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம்  மற்றும் ச்ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் தான் போட்டியிடும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்னதாக, அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ பெரும் படையுடன் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுகவில் ரகுபதி பாலாஜி அதிமுகவில் செல்லு ராஜு நாம் தமிழர் கட்சியின் சார்பில் விக்னேஷ் குமார் தமிழக வெற்றி கழகம் சார்பில் தங்கப்பாண்டி போட்டியிடுகின்றனர் இளம் வேட்பாளரான ரகு பாலாஜி கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருப்பது இந்த தொகுதியில் சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 

இதையும் படிங்க: ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share